வீட்ல இருந்தா பொண்டாட்டி கொடுமை.. வெளில வந்தா வெயில் கொடுமை.. நா என்னதான் பண்றது?
சென்னை: மக்களை வெளியில் தலை காட்ட முடியாமல் வீட்டுக்குள்ளே முடக்கி வைத்திருக்கிறது என வெயிலைப் பற்றி மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
வெயில்.. வெயில்.. வெயில்.. என எந்தப் பக்கம் திரும்பினாலும் வெயில் பற்றிய பேச்சுதான். போனில் பேசினாலோ அல்லது நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டாலோகூட, மற்றவர்கள் நம்மிடமும், நாம் அவர்களிடமும் கேட்கும் முக்கியமான கேள்வி, 'உங்க ஊர்ல வெயில்லாம் எப்டி இருக்கு' என்பதுதான்.
அந்தளவுக்கு நாளுக்கு நாள் வெப்பத்தில் அளவு உயர்ந்து கொண்டே சென்று, மக்களை அலற வைத்து வருகிறது. வேலை நிமித்தம் வெளியில் செல்பவர்கள், 'வெயியிலில் ஆபிசுக்கு வர முடியவில்லை.. மீண்டும் ஒர்க் பிரம் ஹோம் கொடுங்கள்' என கேட்கும் அளவிற்கு பகலில் வெளியில் தலை காட்ட முடியவில்லை.
இன்னும் ஒரு குரூப்போ ஒரு படி மேலே போய், 'பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட்டதுபோல் எங்களுக்கும் கோடை விடுமுறை அளியுங்கள்' என மீம்ஸ் போட்டு அலுவலகங்களில் கேட்க ஆரம்பித்து விட்டனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில வெயில் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications