மச்சான்-ஆ.. இனிமே என்னை அப்டி கூப்பிடாத.. கால் மீ சார்.. கால் மீ வீஏஓ சார்.. ஓகே!
டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுதிவிட்டு, இப்போதே விஏஓ ஆகி விட்டதாக பலர் கனவு காண்பதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியதுமே தேர்வர்களில் பலர் தங்களை வீஏஓவாக கற்பனை செய்ய ஆரம்பித்து விட்டனர் என கலாய்த்துள்ளனர் மீம்ஸ்களில்.

தமிழக அரசில் காலியாக இருக்கும் இளநிலை உதவியாளர், தட்டச்சர், வசூலிப்பாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,138 குரூப் 4 பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு இன்று நடைபெற்றது. இதை சுமார் 18.5 லட்சம் பேர் எழுதினர். நிச்சயம் இந்தத் தேர்வை எழுதியவர்கள் அனைவருமே தங்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான் எழுதியிருப்பார்கள். ஒரு சிலர் இப்போதே அரசு வேலை கிடைத்து விட்டதாக கற்பனையில் வாழவும் ஆரம்பித்திருப்பார்கள். அவர்கள்தான் மீமர்களின் டார்கெட்டே...

எப்படி ஒரு சினிமா பார்த்துவிட்டு வெளியில் வரும் போது, அந்தப் படத்தில் வந்த நாயகனாக, நாயகியாக, அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் தங்களை உணர்வார்களோ.. தேர்வும் அப்படித்தான். தேர்வு எழுதி முடித்து விட்டாலே, அதில் நாம் எப்படியும் பாஸாகி விடுவோம் என அப்போதே பலர் முடிவு செய்து விடுகிறார்கள். ஒரு சிலர் தங்களது உழைப்பை நம்பி அப்படி உறுதியாக நம்புவார்கள். மற்றவர்களோ அதிர்ஷ்டம் அடித்தாவது பாஸாகி விட மாட்டோமா எனப் பகல் கனவு காண்பார்கள்.

இந்த டிஎன்பிஎஸ்சி தேர்விலும் அப்படித்தான்.. இப்போதே பலர் விஏஓ கனவில் மிதக்கத் தொடங்கி விட்டதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் இந்தத் தேர்வை எழுதாத நண்பர்கள். இதோ அவற்றில் நகைச்சுவையான சில மீம்ஸ்கள் உங்களுக்காக...


Recommended Video













Click it and Unblock the Notifications