என்னடா இவன்.. ஒரு சீசன் நல்லா விளையாடுனதுக்கே போர் வரை கொண்டு வந்துட்டான்!
சென்னை : ஐபிஎல்லில் இந்தமுறை ஆர்சிபியைக் கலாய்க்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என ஏங்கிக் கிடந்த மீமர்களுக்கு நல்வாய்ப்பாக, ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு, மீண்டும் தொடக்கம் என அடுத்தடுத்து பிசிசிஐ கண்டெண்ட் கொடுக்க ஆரம்பித்து விட்டது. பிறகென்ன மடை திறந்த வெள்ளம் போல் ஆர்சிபிஐக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிரத் தொடங்கி விட்டனர் நம் நெட்டிசன்கள்.
ஐபிஎல் போட்டிகள் நடக்கிறது என்றாலே ஆர்சிபி தான் எப்போதுமே மீம்ஸ்களின் கண்டெண்ட் ராஜாவாக இருக்கும். ஆனால் இந்தமுறை அதற்கு நேர்மாறாக ஆர்சிபி தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கத் தொடங்க, 'ஒருவேளை நிஜமாகவே இந்தமுறை கப்பை அடித்து விடுவார்களோ' என மீமர்களே ஆச்சர்யப்பட்டு, அந்த அணியைக் கலாய்க்காமல் விட்டு வைத்தனர்.

ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிய போர்ப்பதற்றம் காரணமாக, ஐபிஎல் போட்டிகளை ஒத்தி வைத்தது பிசிசிஐ. இதனால், மீண்டும் ஆர்சிபியைக் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள். சிஎஸ்கேவை வைத்தும், ஆர்சிபியின் வீரர்களை வைத்தும் விதவிதமாக மீம்ஸ்களில் கலாய்த்து வருகின்றனர். அதோடு, சைடுகேப்பில் போர் பதற்றம் பற்றிய மீம்ஸ்களையும் பகிர மறக்கவில்லை.
மீம்ஸ் போட்டு கலாய்க்கும் அளவிற்கு போர் ஒன்றும் நகைச்சுவையான விசயமில்லை, அது பல உயிர்கள் சம்பந்தப்பட்ட மனிதாபிமான விசயம் என்ற புரிதல் இருப்பதால், மற்ற விசயங்களைப் போல் அதனைக் கலாய்க்காமல், நாசூக்காக அதையும் கண்டெண்ட் ஆக்கியுள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
























Click it and Unblock the Notifications