பாகிஸ்தான் புடிச்சா இந்திய மீனவர்கள்,இலங்கை புடிச்சா தமிழக மீனவர்களா?அரசுகளை ஓட்டும் அசத்தல் மீம்ஸ்
தமிழக மீனவர் பிரச்சனையில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளை பிரதிபலித்து இன்டர்நெட்டில் ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை: தமிழக மீனவர் பிரச்சனையில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளை பிரதிபலித்து இன்டர்நெட்டில் ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை மத்திய அரசு எந்த கேள்வியும் கேட்பதில்லை என நெட்டிசன்கள் தங்களின் மீம்ஸ்கள் வாயிலாக தெரிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், அதற்கு மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதும் வழக்கமான ஒன்றுதான் என வலைஞர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு 3 நாட்கள் ஆகியும் மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது.
மீனவர்கள் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் எப்படி செயல்படுகின்றன என்பதை வெளிப்படுத்தி வந்துள்ள மீம்ஸ்களுக்கு வரவேற்பும் அதிகரித்துள்ளது. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
உங்களால முடியுமா?
ஒரே ஒரு சிங்களனை உங்களால சுட முடியுமா?
ஹமரா தேஷ்மே...
மத்திய அரசு எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என கூறுகிறது இந்த மீம்ஸ்
எதுவும் நடக்காது
மாநில அரசு கடிதம் எழுதுவதோடு தனது பணியை முடித்துக்கொள்ளும்.. எதுவும் நடக்காது..
வேற என்ன செய்வீங்க
மீனவர் குடும்பத்துக்கு இழப்பீடு, அதுக்கும் மேல மத்திய அரசுக்கு கடிதம் மீனவர் பிரச்சனையில் மாநில அரசின் செயல்பாடு
இலங்கை புடிச்சா தமிழனா?
பாகிஸ்தான் புடிச்சா இந்திய மீனவர்கள்... இலங்கை புடிச்சா தமிழக மீனவர்கள்.. என்ன நியாயம்
உங்க வாயில வருமா
எவ்வளோ அசால்ட்டா இழப்பீடு அறிவிக்கிறீங்க...
சாவு நேர்மையானதா இருக்கனும்
சாவ பாத்து பயப்படுறவங்க நாங்க இல்ல.. ஆனா அந்த சாவு நேர்மையானதா இருக்கனும்..