விவசாயிகளுக்காக இளைஞர்கள் செய்த முதல் சம்பவம்..!!! அதுவும் சிறப்பான தரமான சம்பவம்..!!
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திப்பாராவில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் சென்னையே ஸ்தம்பித்தது.
சென்னை: கத்திப்பாரா ஜங்ஷனில் நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். மேம்பாலத்துக்கு பூட்டுப் போட்டு அவர்கள் நடத்திய போராட்டத்தால் கத்திப்பாரா மேம்பாலம் முடங்கியது.
சென்னை கிண்டி, வடபழனி, விமான நிலையம் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இளைஞர்களின் போராட்டத்தை பாராட்டியும் ஆதரவு தெரிவித்தும் சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
தரமான சம்பவம்
விவசாயிகளுக்காக இளைஞர்கள் செய்த முதல் சம்பவம்..!!! அதுவும் சிறப்பான தரமான சம்பவம்..!! என நேற்றைய போராட்டத்தை பாராட்டுகிறது இந்த மீம்...
சும்மா அதிருதுல்ல
சென்னை கத்திப்பாரா இளைஞர்களின் போராட்டத்தால் முடங்கி விட்டது - பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.. என்கிறது இந்த மீம்...
பொதுமக்கள் பாதிக்கக்கூடாது
நீங்க பண்ற போராட்டம் எப்பவுமே அரசியல் வாதிய மட்டுமே பாதிக்கிற மாதிரி பண்ணுங்க.. பொதுமக்கள் பாதிக்கக்கூடாது என்கிறது இந்த மீம்...
உண்மையான ஹீரோ
கவுதமன் சார் போல நெஜ வாழ்க்கைலயும் போராட்டம்ஹீரோயிசம் பண்ணுறவன் தான் உண்மையான ஹீரோ... என கூறுகிறது இந்த மீம்...
சாப்பாட்டுக்கு ரோட்டுக்கு வரவும்
சோறு சாப்பிடும் அனைவரும் அடுத்த வேலை சாப்பாட்டுக்கு ரோட்டுக்கு வரவும் - கவுதமன்.. விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாரா பாலத்தில் நடைபெற்ற போராட்டத்தை வெளிப்படுத்துகிறது இந்த மீம்...
கொலை - கொள்ளை குறைந்து இருக்குமே...
நியாயத்திற்காக போராடியவரை காவலில் வைத்துள்ளீர்களே... இதில் பாதியை குற்ற பின்னணி உள்ளவர்களிடம் காட்டி இருந்தால் கொலை - கொள்ளை குறைந்து இருக்குமே...
இப்போ பாலம் தான் ட்ரென்ட்
மச்சான் போராட்டத்துக்கு வரியா... இல்ல இல்ல... மெரினா இல்ல... இப்போ பாலம் தான் ட்ரென்ட்... வரும்போது பெரிய சயிஸ் பூட்டு சங்கிலி எடுத்துட்டு வா..
இதுவெறும் ட்ரெயிலர் தான்
இதுவெறும் ட்ரெயிலர் தான் மா கண்ணா... மெயின் பிக்ச்சர் இன்னும் நீங்க பாக்கல இனிமே பாப்பீங்க... என நேற்று கத்திப்பாரா பாலாத்தில் நடந்த போராட்டத்தை வெளிப்படுத்துகிறது இந்த மீம்...