என்ன ப்ரோ முதலைக்கு சோறு போட்டுட்டு இருக்கீங்கனு கேட்டா.. வந்தாரை வாழ வைக்கும் சென்னையாம்!
சென்னை: பெருவெள்ளத்தின் போது சாலையில் அடித்துச் செல்லப்பட்ட நீரில் முதலை ஒன்று ஊருக்குள் உலா வந்த வீடியோ ஒன்று மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. தற்போது அந்த முதலையைத்தான் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மிக்ஜாங் புயல் தந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து சென்னை இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்குத் திரும்பி வருகிறது. இடையில் ஒரு வாரத்தையே இந்தக் கனமழை தின்று விட்டது என்றுதான் கூற வேண்டும்.
கடந்த ஒரு வாரமாக அவ்வளவாக சமூக ஊடகங்களிலும் சென்னையைச் சேர்ந்தவர்களால் முன்பு போல் ஆக்டிவ்வாக இருக்க முடியவில்லை. காரணம் பலரின் வீட்டில் மின்சாரம் இல்லை. கனமழை, பெருவெள்ளம், புயல்காற்று இதையெல்லாம் தாண்டி, இப்போது வீட்டில் சுத்தப்படுத்தும் பணி என பிஸியாக இருக்கும் சென்னை நெட்டிசன்கள், இப்போதுதான் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட ஆரம்பித்திருக்கின்றனர் போலும். அதனால்தான் திரும்பவும் தங்களது மீம்ஸ் சேட்டையை ஆரம்பித்து விட்டனர்.
முதலாவதாக அவர்கள் கையில் எடுத்திருப்பது வெள்ளத்தில் சென்னையைச் சுற்றிப் பார்த்த முதலையைத்தான். அந்த முதலைக்கு மட்டும் வாய் இருந்தால், 'வேணா விட்ருங்க.. அழுதுருவேன்' என வடிவேல் டயலாக்கைப் பேசி அழுதிருக்கும். அந்தளவிற்கு அந்த முதலையைக் கலாய்ச்சிபை செய்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான முதலை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications