அட்சய திரிதியை முடிஞ்சுடுச்சுனு சந்தோசப்பட்டா.. அடுத்து வசந்த பஞ்சமி இருக்குனு சொல்றா!
சென்னை : அட்சய திரிதியை முடிந்த கையோடு அடுத்து வரும் வசந்த பஞ்சமிக்கு என்ன நகை வாங்கலாம் எனப் பெண்கள் இப்போதே கணக்குப் போடத் தொடங்கி விட்டனர் என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மாதத்தின் முதல் நாளே பலருக்கு மாதக்கடைசி மாதிரிதான் கையில் காசிருக்காது. காசில்லை என்றால் தானாகவே புலம்பத் தொடங்கி விடுவார்கள். அதிலும் மாதக்கடைசியான நேற்று அட்சய திரிதியை வந்துவிட, கடன் வாங்கியாவது தங்கத்தை வாங்கி விட்டனர். பிறகென்ன அதையும் சேர்த்து தங்கள் மீம்ஸ்களில் புலம்பித் தள்ளி வருகின்றனர்.
"அட்சய திரிதியை ஓவர்.. இந்த வருச கோட்டா ஓவர்.. இனி அடுத்த வருசம்தான் தங்கம் வாங்கணும்னு நினைச்சா.. அடுத்து வசந்த பஞ்சமினு ஒண்ணு இருக்காம்" என்றும், "கடவுளே எவ்ளோ புலம்புறேன்.. ஏன் ரெஸ்பான்சே பண்ண மாட்டேங்குற.. நீயும் என்னை ப்ளாக் பண்ணிட்டியா?" என்றும் விதவிதமாகப் புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications