சும்மா பாத்துட்டு போக வந்தேன்னு நினைச்சியா.. நா பத்த வச்சிட்டுப் போக வந்தேன்டா!
சென்னை : கோடை விடுமுறை ஆரம்பமாகி விட்டதால், உறவினர்கள் வீட்டிற்கு வருவதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
முன்பெல்லாம் பண்டிகை, திருவிழா, வீட்டில் விஷேசம் மற்றும் விடுமுறை நாட்கள் என்றாலே மக்களுக்கு சந்தோசமாக இருக்கும். ஏனென்றால் உறவினர்கள் எல்லாம் ஒன்று கூடி ஒரே கொண்டாட்டம், கும்மாளமாக இருக்கும் என்பதால். ஆனால் இப்போதெல்லாம் அப்படிப்பட்ட குடும்பங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சமூகவலைதளப் பக்கங்களில் ரீல்ஸ் பதிவிடுவதற்காக மட்டுமே பல குடும்பங்கள் பாசமாக காட்டிக் கொள்கின்றனர்.
மற்றபடி உறவினர்கள் மட்டுமில்லை, அக்கம்பக்கத்தார் நன்றாக இருந்தால்கூட நிறைய பேருக்குப் பிடிப்பதில்லை. இதனாலேயே உறவினர்கள் வீட்டிற்கு வருகிறார்கள் என்றால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள். "சும்மா பாத்துட்டு போக வந்தேன்னு நினைச்சியா.. நா பத்த வச்சிட்டுப் போக வந்தேன்டா!" என உறவினர்களை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
கூடவே, ஏப்ரல் மாதம் பிறந்து 20 தேதி ஆகி விட்டதால், வழக்கம் போல் பணப்பிரச்சினை மற்றும் மனப்பிரச்சினையை வைத்தும் மறக்காமல் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். "டேய் சரவணா.. யுபிஐ வேலை செய்யலடா.. ஹோட்டல் வாசல்லயே உட்கார்ந்திருக்கேன்.. வந்து கூட்டிட்டு போடா!" என்பது போன்ற மீம்ஸ்கள் நினைத்து நினைத்து சிரிக்க வைக்கின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications