Meme:பாண்டியர்களே! பொன்னியின் செல்வனை புறக்கணித்தால்! சோழ நாட்டில் பாண்டியன் ஸ்டோர்ஸை புறக்கணிப்போம்
சென்னை: இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் குறித்த மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.
கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தில் மிகப் பெரிய நடிகர்கள், நடிகைகள் எல்லாம் ஒரு சேர நடித்துள்ளனர். இந்த படம் வெளியாவதற்கு முன்பே அதுகுறித்த எதிர்ப்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா இல்லையா என்பது குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை அனுப்பி வருகிறார்கள். அவற்றில் வாசகர்களுக்காக சில:

பாண்டிய நாடு
பாண்டிய நாட்டில் பொன்னியின் செல்வன் புறக்கணிக்கப்பட்டால் சோழ நாட்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் புறக்கணிக்கப்படும் என ஒரு மீம் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் அதிகம் பேரால் பார்க்கப்படுகிறது. சோழர், பாண்டியர் சண்டையில் அந்த சீரியலை புறக்கணிப்போம்னு சொல்லும் அளவுக்கு வந்துள்ளனர் என்பதை காட்டுகிறது இந்த மீம்.

மணிரத்னம்
எப்பா மணி உன்னை நம்பி எல்லார்கிட்டேயும் ஓவர் பில்டப் செய்து வச்சிருக்கோம்... ஜெயிச்சுரு யா ராசா ஜெயிச்சுரு... என சூரரை போற்று படத்தின் காட்சிகளை வைத்து மணிரத்னத்திற்கு அறிவுரை சொல்வது போல் உள்ளது இந்த மீம்.. அதாவது பான் இந்தியா படமான பாகுபாலி உள்ளிட்ட படங்கள் அளவுக்கு தமிழ் படமான பொன்னியின் செல்வன் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தமிழர்கள் ஏற்றியிருந்தனர். அதனால்தான் மற்ற மொழிகளுக்கு மத்தியில் இந்த படம் ஜெயிக்க வேண்டும் என அனைவரும் விரும்பியதை காட்டுகிறது இந்த மீம்.

முதல் நாள்
பொன்னியின் செல்வன் படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்க்காதவர்கள் ஏதோ தெய்வ குற்றம் செய்தது போல் வடிவேல் காமெடியை சித்தரிக்கிறது இந்த மீம்.

ரிவ்யூ
எந்த படம் பார்த்தாலும் இன்று ரெவ்யூ என்ற பெயரில் சிறிய யூடியூப் சேனல் முதல் தொலைகாட்சி வரை அலப்பறையாக இருக்கும். அப்படி சில படங்கள் மீது விமர்சனங்களை எழுதவும் ரிவ்யூ சொல்லவும் அத்தனை எளிதாக இருக்காது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பொன்னியின் செல்வன் நாவலை முழுவதுமாக எடுக்காவிட்டாலும் தங்களுக்கு தேவையானவற்றை எடுத்துள்ளதாக மணி ரத்னம் தெரிவித்துள்ளார். எனவே இந்த படம் சில ரசிகர்களுக்கு புரியவில்லை என்பதை இந்த மீம் சொல்கிறது.

வந்தியும் அருளும்
வந்தியதேவனும் அருள்மொழியும் பேசிக் கொள்வது போன்ற காட்சிகளை விளக்குகிறது இந்த மீம். அதாவது வெற்றிக் கொடி கட்டு என்ற படத்தில் வடிவேல் துபாயில் வசித்து வருவதாக ஊருக்குள் பொய் சொல்லிக் கொண்டு பாடிலேங்க்வேஜை மெயின்டெயின் செய்வார். அவரை கலாய்ப்பதையே பார்த்திபன் வேலையாக கொண்டிருப்பார். இதனால் ஒரு முறை பர்தா போட்டுக் கொண்டு வடிவேல் சென்ற போது பார்த்திபன் கண்டுபிடித்துவிடுவார். அப்போது என்னை எப்படிப்பா கண்டுபிடித்தே என கேட்பார் வடிவேல். இந்த காமெடி காட்சியை வைத்து இந்த மீம் உருவாக்கப்பட்டுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications