அடடே.. என்னாமா யோசிக்கிறாய்ங்க.. ரணகளத்திலும் இந்த கிளுகிளுப்பு தேவையா.. ஆனா நல்லாருக்குய்யா!
சென்னை: கொரோனா பாதிப்பை வைத்து வண்ணங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட தமிழக வரைப்படத்தை நயன்தாராவின் உடையுடன் நெட்டிசன்கள் ஒப்பிட்டுள்ளது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை அதன் பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் சிகப்பு, ஆரஞ்ச், பச்சை ஆகிய 3 வண்ணங்களாக பிரித்து காட்டப்பட்டுள்ளது.
அந்த வரைப்படத்தை நம் நெட்டிசன்கள் நயன்தாரா திரைப்படத்தில் அணிந்துள்ள ஆடையின் நிறத்துடன் ஒப்பிட்டுள்ளது. இது வைரலாகி வருகிறது.

ரணக்களம்
கொரோனா பாதிப்பை வைத்து தமிழகம் வண்ணங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. சிகப்பு, பச்சை, ஆரஞ்ச் ஆகிய நிறங்களாகும். இந்த கொரோனா வரைப்படத்தை அதே நிறங்களில் உடை அணிந்துள்ள நயன்தாராவின் படத்துடன் ஒப்பிட்டுள்ளனர்.

குறள்
கொரோனா குறள்:
அடக்கமாய் அகத்தில் தங்குக அடங்காதின்
கொரோனா உயிர்கொன்று விடும்.

தேங்குற குளம்
ஓடுற நதி போல இருந்த என் வாழ்க்கைய
தேங்கற குளம் போல ஆக்கிடுச்சு...
இந்த #கொரோனா

மறைத்த உண்மைகள்
மூடி மூடி
மறைத்த
உண்மைகள்
கட்டவிழ்த்து
விடும்போது
பெருத்த
சேதாரம்
நிச்சயம்..
#கொரோனா
போல.....

மதுக்கடைகள்
அவனவன்
#கொரோனாவைரஸ்
வந்து சாகிறான்,
இப்ப மதுக்கடை தேவையா?

மூக்கில் கை வைக்கும்
இது என்ன புதுசு!!!!
7 தேதி நம்ம சரக்கு வருமானம் பார்த்து.... இந்த #கொரோனாவைரஸ் மூக்கில் கை வைக்கும்!!!












Click it and Unblock the Notifications