3ஜி போய் 4ஜியே வந்தாச்சு.. இப்பத்தான் வருதா 2ஜி தீர்ப்பு.. நெட்டிசன்கள் கலாய்!
நாட்டையே உலுக்கிய 2ஜி அலைக்கற்றை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதையடுத்து சமூக வலைதளங்களில் அதுகுறித்த கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றனர்.
சென்னை: நாட்டையே உலுக்கிய 2ஜி அலைக்கற்றை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதையடுத்து சமூக வலைதளங்களில் அதுகுறித்த கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றனர்.
நாட்டையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்டோர் மீதான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
இதுகுறித்து சமூகவலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் பகீரப்பட்டு வருகிறது. அவற்றில் சில
|
இதுதானடா உங்க டக்...
அடப்பாவிகளா.... நாங்க 4ஜி சிம் வாங்கிட்டு 5ஜி க்காக wait பண்ணும் போது.... நீங்க இப்ப தான் 2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்குறிங்க... இதுதானடா உங்க டக்....
|
தமிழ்நாட்டுக்கு சிறப்பான நாள்..
குட் மார்னிங்..
தமிழ்நாட்டுக்கு சிறப்பான நாள்..
2ஜி தீர்ப்பு..
ஆர்கே நகர் இடைத்தேர்தல்..
|
திமுக வுக்கு இழப்பு..
விடுதலையானால் ஸ்டாலினுக்கு இழப்பு, கைதானால் திமுக வுக்கு இழப்பு..அவ்ளோ தான் 2ஜி..
|
ஆஜ் 2ஜி கா தீர்ப்பு..
இன்னைக்கு 2ஜி தீர்ப்பு.. என்கிறது இந்த மீம்..