சசிகலா பரோலில் வந்ததை விட உண்மையான மெர்சல் கலைஞரின் உலா! நெட்டிசன்ஸ் கலக்கல்
திமுக தலைவர் கருணாநிதி ஓராண்டுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்ததால் கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி ஓராண்டுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்ததால் கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி ஓராண்டாக எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் ஓராண்டுக்குப் பின் வீட்டை விட்டு வெளியே வந்தார்.
தனது மூத்தப்பிள்ளை என கருதும் முரசொலியின் பவள விழா கண்காட்சி அரங்கை அவர் நேற்று பார்வையிட்டார். இதுகுறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
உண்மையான மெர்சல்
சசிகலா பரோலில் வந்ததை விட உண்மையான மெர்சல் இன்றைய கலைஞரின் உலா.... கெத்து.. என்கிறது இந் டிவிட்..
|
வந்தது வரலாறு
வந்தது வரலாறு.. கருணாநிதி.. என அவரது வருகையை புகழ்கிறார் இந்த வலைஞர்
|
கோபாலபுரத்து சூரியன்
#கருணாநிதி காவிகளையும் பாவிகளையும் வேறருக்க கோபாலபுரத்து சூரியன் இரவில் உதயம்.. என சொல்கிறது இந்த டிவிட்
|
அவருக்கு நிகர் அவரே
எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், அரசியல் உலகில் #கலைஞர் என்ற மனிதருக்கு நிகர் அவர் மட்டுமே என்பது அனைவரும் அறிந்ததே! என்கிறார் இந்த வலைஞர்