#மெர்சல் விவகாரத்தில் ஹைகோர்ட் தீர்ப்பு: கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி.. கொண்டாடும் ரசிகர்
மெர்சல் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: மெர்சல் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி குறித்த விமர்சித்தற்காக பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் மெர்சல் பட தணிக்கை சான்றிதழை திரும்பப் பெறக்கோரி வழக்கறிஞர் அஸ்வத்தாமன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை இன்று விசாரித்த ஹைகோர்ட் படத்தில் சொல்லும் கருத்தை படம் பார்ப்போர் பின்பற்றுவார்கள் என்று கூறமுடியாது என தெரிவித்தது.
மெர்சல் படத்தை எதிர்ப்பதில் எந்த முகாந்திரமும் இல்லை என மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் கருத்துச் சுதந்திரம் என்பது அனைவருக்குமானது, பிடிக்கவில்லையெனில் படத்தை பார்க்காதீர் என்றும் சென்னை ஹைகோர்ட் தெரிவித்தது. ஹைகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
|
சுபமாக முடிந்தது
இதுக்காடா இவ்வளவு அக்கப்போரு... என கேட்கிறது இந்த மீம்
|
ஏன் கருத்து சொல்வானே
தியேட்டர் போனோமா,படம பார்தோமா,கை தட்டினோமா,பாப்காரன் வாங்கி சாப்பிட்டோமான்னு வந்துட்டே இருக்கனும்... கருத்தெல்லாம் சொல்லக்கூடாது என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்
|
தைரியம் உள்ளதா?
இப்போது சொல்லுங்கள் பார்க்கலாம் நீதிபதி தவறான தீர்ப்பு சொல்லிவிட்டார் என்று. சொல்ல உங்களுக்கு தைரியம் உள்ளதா? என கேட்கிறார் இந்த வலைஞர்
|
கருத்து சுதந்திரத்திற்கு வெற்றி
கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி! என தீர்ப்பை கொண்டாடுகிறார் இந்த நெட்டிசன்
|
நீதிபதிகளின் மதம் என்ன?
மொ்சல் படத்திற்கு தீா்ப்பு வழங்கிய நீதிபதிகளை கூட ( மதம்) கிறிஸ்டியன் முஸ்லிம் என்று சொல்லுவாா்கள்... என்கிறது இந்த டிவிட்
|
நீதி அரசர்களுக்கு நன்றி
சரியான தீர்ப்பை அளித்த நீதி அரசர்களுக்கு நன்றி. பணத்தின் அருமை ஏழைகளுக்கு தான் தெரியும் ஊழல்வாதிகளுக்கு தெரியாது.. என்கிறார் இந்த வலைஞர்
|
சரியான தீர்ப்பு
சரியான தீர்ப்பு என்கிறார் இந்த நெட்டிசன்..