For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலா பரோலில் பராக்.... என்னதான் நடக்கும் - நெட்டிசன்ஸ் பரபரப்பு

சசிகலா பரோலில் ரிட்டன், அமைச்சர்கள், முதல்வர் ரியாக்சன் எப்பூடி என்று மீம்ஸ் போட்டு கலக்குகின்றனர் நெட்டிசன்கள்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: 200 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்த சசிகலா தற்போது பரோலில் வெளியே வந்துள்ளார். இனி தமிழகத்தில் அமைச்சர்கள் முதல்வர், துணைமுதல்வர் ரியாக்சன் எப்படியிருக்கும் என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போட தொடங்கி விட்டனர்.

சசிகலா சிறைக்கு போன உடன் சின்னம்மா என்று கூறிவந்த அனைவரும் சசிகலா என்று சத்தமாக பேச ஆரம்பித்தனர்.

ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலாதான் காரணம் என்றும் குற்றம் சாட்டினர். இனி சசிகலாவை இவர்கள் எப்படி சந்திப்பார்கள் என்று கேட்டு சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

எல்லா அமைச்சர்களும் எப்படி?

சசிகலா சிறையில் இருந்து வந்த பின்னர் அமைச்சர்கள் ரியாக்சன் எப்படியிருக்கும் என்ற கிண்டலடித்துள்ளார் ஒரு நெட்டிசன். சிவாஜி படத்தின் கலக்கல் சீன் இது.

அமைச்சர்களின் நிலை

பரோலில் வரும் சசிகலாவை பார்க்க மாட்டோம் என்று பல அமைச்சர்கள் கூறி வருகின்றனர். சிலரோ பார்ப்போம் என்று கூறுகின்றனர். சசிகலாவை விமர்சித்த பலரின் நிலை இனி இப்படித்தான் என்று சொல்லாமல் சொல்கிறார் இவர்.

கொஞ்சம் கூட மாறலையே

200 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தாலும் கொஞ்சம் கூட மாறலையே, அதே பச்சை சேலை கட்டி, பன் கொண்டை போட்டு சும்மா ஜம்மென்று காரில் ஏறினார் சசிகலா. இதைத்தான் மீம்ஸ் போட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

எம்எல்ஏக்களின் வேண்டுதல்

சாமி சசிகலாவிற்கு பரோல் கிடைக்கக்கூடாது என்று ஊரில் இருக்கும் கடவுள்களை எல்லாம் வேண்டிக்கொண்டிருந்தனர். ஆனாலும் பிரயோஜனமில்லை. பரோலில் வந்தே விட்டார் சசிகலா.

English summary
Sasikala comming out of parole in Chennai. Sasikala has released parole on 5 days to attend to her husband M Natarajan, who is critically ill, memes creators troll in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X