உச்சநீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள்! அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
டெல்லி: தலைமை நீதிபதியைத் தவிர்த்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33லிருந்து 37 ஆக அதிகரிக்க மத்திய அரசு அவசர சட்டத்த கொண்டு வந்திருந்தது. இந்நிலையில், இந்த சட்டத்திற்கு தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
இதனால், தலைமை நீதிபதி உட்பட, உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, தலைமை நீதிபதி உட்பட 32 நீதிபதிகளே பணிபுரிகின்றனர்.

'உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை திருத்த அவசரச் சட்டம் 2026' என்ற இந்த அவசரச் சட்டம், 1956 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை சட்டத்தின் பிரிவு 2-ஐ திருத்துகிறது. இத்திருத்தம், முன்னர் குறிப்பிட்ட "33" என்ற எண்ணை "37" ஆக மாற்றியுள்ளது.
மே 5 ஆம் தேதி, மத்திய அமைச்சரவை உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. இதற்கு முன்னர், 2019 ஆம் ஆண்டில் தலைமை நீதிபதியைத் தவிர்த்து, நீதிபதிகளின் எண்ணிக்கை 30லிருந்து 33 ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications