சன்டேவும் அதுவுமா கூட்டாஞ்சோறாம்.. போற உசிரு பசியிலேயே போகட்டும்னு ஓடி வந்துட்டேன்!
சென்னை : அமாவாசை என்பதால் இன்று பல வீடுகளில் அசைவம் சமைக்கவில்லை. இதனால் வெறுத்துப் போன அசைவ உணவுப் பிரியர்கள் தங்களது ஆதங்கங்களை எல்லாம் மீம்ஸ் போட்டு கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
மற்ற நாட்களில் எப்படியோ.. ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்றால் கட்டாயம் அசைவ உணவு சாப்பிட்டேயாக வேண்டும் நம் அசைவ உணவுப் பிரியர்களுக்கு. அதுவும் அடுத்த வாரம் என்ன சாப்பிடலாம் என்பதை இந்த வாரமே பிளான் பண்ணி வைத்து விடுவார்கள். ஆனால் அவர்களது வயிற்றில் சாம்பாரை ஊற்றுவதுபோல், அமாவாசை மாதிரி ஏதாவது அசைவம் சாப்பிடக்கூடாத நாள், சரியாக ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து விடும்.
வீட்டில் எதிர்த்துப் பேசினால், கிடைக்கிற சாம்பார் சோறுகூட கிடைக்காமல் போய் விடும் என்ற பயத்தில், தங்களது ஆதங்கங்களை எல்லாம் மீம்ஸ்களாக சமூகவலைதளப் பக்கங்களில் கொட்டி விடுவார்கள். இதனாலேயே அடிக்கடி ஞாயிற்றுக்கிழமைகளில் சாப்பாடு பற்றிய கொண்டாட்ட மீம்ஸ்களுக்குப் பதிலாக, புலம்பல் மீம்ஸ்கள் நிறைந்திருக்கும்.
இன்றும் அப்படித்தான் அமாவாசை என்பதால் பல வீடுகளில் அசைவம் சமைக்கவில்லை போலும். அதனால்தான், "சன்டேவும் அதுவுமா கூட்டாஞ்சோறாம்.. போற உசிரு பசிலயே போகட்டும்னு ஓடி வந்துட்டேன்!" என்றும், "இன்னும் கறிகுழம்பு வாசனை வரலையேனு கிச்சனுக்கு போனேன்.. அப்புறம்தான் தெரிஞ்சது இன்னைக்கு அமாவாசையாம்!" என்றும் விதவிதமாகப் புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications