மட்டனு, சிக்கன்னு திங்குறதுனா சைலண்ட்டா திங்க மாட்டியா.. சோதிக்காதீங்கடா என்னைய.. சோதிக்காதீங்க!
சென்னை: ஞாயிற்றுக்கிழமை என்றால் எப்படியும் அசைவம் சாப்பிட்டே ஆகவேண்டும் என உறுதி கொண்டுள்ள நெட்டிசன்கள், வீட்டில் சாம்பார் சாப்பிட்ட கதையை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை என்பது அசைவப் பிரியர்களைப் பொறுத்தவரை அசைவம் சாப்பிடுவதற்கென ஒதுக்கப்பட்ட நாள். இந்த வாரம் மீன் சாப்பிட்டால், அடுத்த வாரம் மட்டன், அதற்கும் அடுத்த வாரம் சிக்கன் என ஒரு மாதத்தின் அனைத்து நாட்களுக்கும் ஷெட்யூல் போட்டு வைத்திருப்பார்கள். ஆனால், 'குறுக்க இந்த கௌசிக் வந்தா?' என்பதுபோல், சில வாரங்களில் ஞாயிறு மதியம் சாம்பாரும், தயிர் சாதமும் சாப்பிடும்படி ஆகிவிடும்.
அப்படி இன்று யார் யார் வீட்டில் சாம்பார் சாப்பிட்டார்களோ தெரியவில்லை. அதனால்தான் அசைவம் சாப்பிடாத கோபத்தை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக அசைவம் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவுகளின் போட்டோக்களை சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறவர்களை மீம்ஸ் போட்டு மறைமுகமாகத் திட்டி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications