ஆடி மாசம்னு ஒய்ப்பை ஊருக்கு கூட்டிட்டு போய்ட்டாங்களாம்.. அதான் இப்டி ஸ்டேட்டஸ்ல பீலிங்கோ பீலிங்கு!
சென்னை: ஆடி மாதம் பெற்றோர்களால் பிரித்து வைக்கப் பட்டிருக்கும் புதுமணத் தம்பதிகள், தங்களது சோகத்தை மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
ஆடி மாதம் வந்து விட்டாலே புதுமணத் தம்பதிகளுக்கு கவலையும் வந்து விடும். காரணம் தம்பதிகளைப் பிரித்து வைத்து விடுவார்கள் என்பது தான். கொடுமையிலும் கொடுமையாக, திருமணமான பத்து, இருபது நாட்களில்கூட புதுமணத் தம்பதிகளைப் பிரித்து விடுவார்கள். இதற்குப் பொறுமையாக ஆடி முடிந்தே திருமணத்தை நடத்தி இருக்கலாமே என மீம்ஸ் போட்டு குமுறி வருகின்றனர் புதுமணத் தம்பதிகள்.
ஆடி தள்ளுபடி, ஆடி அமாவாசை என ஒருபுறம் குடும்பத் தலைவர்கள் மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்க, மற்றொருபுறம் புதுமணத் தம்பதிகளின் இந்த குமுறல் மீம்ஸ்கள் தான் இணையத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.
இதோ அப்படியாக, சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான ஆடி மாத மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications