நல்ல காலேஜு.. நல்ல வேலை.. நல்ல வரன்.. ஏய் கொஞ்சம் பொறுய்யா.. இன்னைக்குத்தான் ரிசல்ட்டே வந்திருக்கு!
சென்னை: பிளஸ் டூ ரிசல்ட் வந்துள்ளதை வைத்து நகைச்சுவையாக மட்டுமின்றி, மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நல்ல கருத்துகளையும் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும் ரிசல்ட் வருகிறது என்றாலே மாணவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து விடும். முன்பெல்லாம் மார்க் குறைந்தால் வீட்டில் அடிப்பார்களே, திட்டுவார்களே என்று மட்டும்தான் பயப்படுவார்கள். ஆனால், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் மன வளர்ச்சியும் அதிகமாகி, தேர்வில் தோல்வியடைந்து விட்டாலே, ஏதோ வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற மனநிலைக்கு பலர் வந்து விடுகின்றனர்.

இதற்கான கவுன்சிலிங்கை அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மாணவர்களுக்கு அளித்து வரும் நிலையில், மீமர்களும் தங்களது பொறுப்பை வெளிக்காட்டும்படியாக, பிளஸ் டூ ரிசல்ட் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களின் மனதைப் புண்படுத்தாத அளவிற்கு, வாழ்வின் யதார்த்தத்தை வெளிக்காட்டும் வகையிலான மீம்ஸ்களை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
கூடவே, 'தேர்வுகள் எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம்.. ஆனால் உயிர் முக்கியம் பிகிலு' என்ற ரேஞ்சுக்கு தங்கள் பாணியிலேயே அழகாக அறிவுரையும் கூறி வருகின்றனர். சமூக பொறுப்புணர்வுடன் கூடிய அவர்களது இந்த மீம்ஸ்கள் ரசிக்கும்படி மட்டுமல்ல.. பாராட்டும்படியும் உள்ளது.




















Click it and Unblock the Notifications