மழைக்காலம் வந்துட்டாலே.. மாடிக்கும் வீட்டுக்கும் ஓடி ஓடி.. அந்த வேதனை இருக்கே வேதனை!
மழை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: மழை வந்தாலே கூடவே துவைத்த துணியை எப்படிக் காய வைப்பது என்ற கவலையும் சேர்ந்து விடும்.
கோடை காலங்களில் சாலையில் ஆம்லெட் போட்டு சாப்பிடக்கூடிய அளவிற்கு வெயில் கொளுத்தும். அதற்கு அப்படியே நேர்மாறாக மழைக்காலம் வந்து விட்டால், காயப்போட்ட கர்சீப்கூட அவ்வளவு சீக்கிரம் காயாது. எல்லா வீடுகளிலும் துணிக்கடைகள் மாதிரி வீடு முழுக்க கயிறு கட்டி துணி காயப் போட்டிருப்பார்கள். ஆனால் பேன் காற்றிலும் துணிகள் காயாமல் இருக்கும் என்பது தான் கொடுமையிலும் கொடுமை.
லேசாக வெயில் அடிக்கிறது என நம்பி துணியை வெளியில் காயப்போட்டால், அடுத்த நிமிடமே இதற்குத்தான் காத்திருந்தோம் என்பது மாதிரி கருமேகங்கள் எங்கிருந்தோ ஓடி வந்து தூறல் போடத் தொடங்கி விடும்.பல வீடுகளில் மாடிக்கும், வீட்டிற்கும் காயப்போட்ட துணியைத் தூக்கிக் கொண்டுஓட்டப் பந்தயத்தில் ஓடுவது போல் பதறிக் கொண்டு இருப்பதைப் பார்க்க முடியும்.
பிறகென்ன மீமர்களுக்கு இதுவும் ஒரு சூப்பர் கண்டெண்ட் தான். மழைக்காலம் வந்து விட்டால் மறக்காமல், மழையோடு துணி காயப்போடும் மீம்ஸ்களையும் அதிகம் பகிர ஆரம்பித்து விடுகின்றனர்.