கொரோனா வைரஸ் தான் கண்ணுக்கு தெரியாதுனாங்க.. இப்போ ஊசி கூடவா.. கியாரே செட்டிங்கா நயன்?
சென்னை: கொரோனா தடுப்பூசி போடப் போய், நானும் ரவுடி தான் என வாண்டடாக வண்டியில் ஏறி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்கள் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்.
நானும் ரவுடி தான் படம் முதல் இருவரும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த கதை தான். இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் நயனும், விக்கியும் ஒன்றாக ஊர் சுற்றுவது தான் வழக்கம்.
அதேபோல் தற்போது இருவரும் மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டனர். ஆனால் அதில் இருந்து தான் வில்லங்கமே தொடங்கியிருக்கிறது.
விக்னேஷ் சிவன் ஊசி செலுத்திக்கொள்ளும் புகைப்படத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நயன்தாரா ஊசி போட்டுக்கொள்ளும் புகைப்படத்தில் ஊசி கண்ணுக்கு தெரியவில்லை. இதனால் 'க்யாரே செட்டிங்கா' என நயனை வைத்து நக்கலடித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
இதையொட்டி சமூகவலைதளங்களில் பரவி வரும் மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்கு.