வாழ்வது மகிழ்ச்சிக்காகவே.. கவலைகளை விடுங்க.. !
வாழ்வது எதற்காக.. நிறையப் பேருக்கு இதற்கான அர்த்தம் தெரிவதில்லை. ஏதாவது ஒவ்வாத காரணத்தை வைத்துக் கொண்டு எப்போதும் கவலையுடன் இருப்பவர்கள் பலர்.
உண்மையில் வாழ்வதே மகிழ்ச்சிக்காகத்தான். வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம். எப்படிங்க முடியும் என்று பலர் கேட்கலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.. எனவே வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க தேவையான மந்திரமும் நம்மிடமேதான் இருக்கிறது.
மகிழ்ச்சியை எவராலும் விலைக்கொடுத்து வாங்க முடியாதுங்க. நம்ம ஒவ்வொருத்தருக்குள்ளும் மகிழ்ச்சி இருக்கு. நேற்று நடந்த விஷயங்களை மறந்துவிட்டு நடப்பு நிகழ்வுகளுக்கேற்ற மாதிரி மனதை சந்தோசமாக வைத்துக் கொள்ளுங்கள். சின்ன சின்ன சந்தோசங்கள் தானே வாழ்க்கையை அழகாக்கும்.

பாசிட்டிவாக மட்டுமே பாருங்க
நான் இன்னிக்கு ஒரு மணி நேரம் வாக்கிங் போகலயே என்று கவலைப்படுவதை விட நான் இன்னிக்கு அரை மணி நேரம் வாக்கிங் போனேன் என்று மகிழுங்கள். சின்னக் குழந்தைக்கு சாக்லேட் கிடைத்தால் மகிழ்ச்சி படிக்கும் பசங்களுக்கு பள்ளி விடுமுறை என்றால் மகிழ்ச்சி வயதானவர்களுக்கு தாங்கள் இறுதிவரை தங்கள் சொந்தக் காலில் நிற்பதே மகிழ்ச்சி.

பணம் இருக்குமிடத்தில் மகிழ்ச்சி இல்லை
கோடி கோடியாய் பணம் கொட்டிக் கிடப்பவனிடம் மகிழ்ச்சியில்லை ஆனால் குடிசை வீட்டில் வாழ்ந்தாலும் மூன்று வேளை உணவு கிடைத்ததை எண்ணி விவசாயி மகிழ்கிறான். பணம் மகிழ்ச்சியைக் கொடுப்பதில்லை மாறாக நாம் செய்யும் செயல்களே நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நான் நல்லதையே நினைக்கிறேன் நல்லதையே செய்கிறேன் அதனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை விட தீமை நடந்தாலும் அதிலிருந்து நான் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வேன் என்று கூறுபவனே சிறந்தவன்.

வாழ்க்கையில் தன்னிறைவு
வாழ்வில் தன்னிறைவு அடைந்தவன் மகிழ்ச்சியாக இருக்கிறான். பசியுடன் இருக்கும் உயிருக்கு உணவளிக்கும் போதும் அந்த உணவை அவர்கள் உண்ணும்போதும் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி தான். வெளியூரில் இருப்பவனுக்கு சொந்த ஊர் வந்தால் மகிழ்ச்சி வெளிநாட்டில் இருப்பவருக்கு தாய்நாட்டிற்கு வந்தால் மகிழ்ச்சி நண்பர்களோடு நேரம் செலவிட்டால் மகிழ்ச்சி இப்படி வாழ்வில் சின்ன சின்ன சந்தோசங்கள் ஏராளம்.

ஒரு முழம் பூ மகிழ்ச்சி தரும்
கணவன் மனைவிக்கு ஒரு முழம் பூ வாங்கிக் கொடுப்பதில் இருக்கிறது இருவரது மகிழ்ச்சியும். வீடு கட்டுவது பிறந்தநாள் கொண்டாடுவது இதெல்லாம் ஒரு நாள் மகிழ்ச்சியே. ஆனால் தினம் தினம் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே வாழ்க்கைப் பயணத்தை வெற்றிப் பயணமாக மாற்ற முடியும். மகிழ்ச்சி அது தான் மனிதனுக்குப் பலம். வாழ்க்கை என்பது ஒரு முறை தான். இருக்கும் வரை ஒவ்வொரு நொடியும் ரசித்து மகிழ்ச்சியோடு வாழுங்கள். நீங்கள் மகிழ்வதோடு நில்லாமல் உங்கள் சுற்றத்தாரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துங்கள்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications