ஆசை மறந்து போகும்.. பாசம் கூடவே இருக்கும்!
எப்போது ஆசை என்பது கொஞ்ச காலம்தான். ஓடிப் போய் விடும். ஆனால் பாசம் தான் எப்போதும் கூடவே இருக்கும். எனவே மனதில் எப்போதுமே பாசத்தை வரித்துக் கொள்ளுங்கள், ஆசையை ஓரம் கட்டி விடுங்கள். பாசத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஆசை என்பது நீடித்து நிலைப்பதில்லை ஆனால் பாசம் காலத்திற்கும் நீடிக்கும். அன்பு ஒன்றே அகிலத்தை ஆளும் சக்தி உடையது. மற்றவர்கள் மீது அபரிமிதமான அன்பு காட்டுங்கள். பிறர் பொருள் மீது ஆசைப்படாதீர்கள். முடிந்தவரை அன்பைப் பகிருங்கள் பிறருடன்.
அன்பு ஒன்றே பிரதானம். மற்றவரிடம் அன்பு காட்டுங்கள். உங்கள் குழந்தைகளை பெற்றோரை நேசியுங்கள். யாரைப் பார்த்தும் பொறாமைப்பட கூடாது. ஆசை சிறிது காலம் தான் ஆனால் பாசம் நீ்ண்ட காலம் நிலைக்கும்.
சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை என்பது போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். சின்ன குழந்தையாக இருக்கும் போது பந்து விளையாட ஆசை சிறுவர் பருவத்தில் சைக்கிள் ஓட்ட ஆசை வளர் பருவத்தில் மழையை ரசிக்க ஆசை இளம்பருவத்தில் நண்பர்களுடன் அரட்டை செய்ய ஆசை மனதுக்குப் பிடித்தவரை மணமுடிக்க ஆசை பிள்ளைகளைச் சிறப்பாக வளர்க்க ஆசை இப்படி எத்தனை எத்தனையோ ஆசைகள் இருந்தாலும் அவைகள் எல்லாம் சிறிது காலமே இருக்கும். ஆனால் நாம் பிறரிடம் வைக்கும் அன்பானது நம் உயிருள்ளவரை இருக்கும்.
பாசம்.. விஸ்வாசம்.. உங்களை அடிச்சிக்க ஆளே இல்ல பாஸ்.. இதோ மற்றுமொரு உதாரணம்!
அன்பு காட்டுங்கள் உயிர்களிடத்தில். அன்பு காட்டும் இதயம் தாயுள்ளம் கொண்ட உள்ளம். அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். உங்களால் முடிந்தவரை பிறருக்கு உதவுங்கள். பாசம் என்றும் மாறாதது. நாம் சோர்ந்து போய் இருக்கும் போதெல்லாம் நம்மை ஊக்குவிப்பது பாசமான உறவுகள் தான். அன்பு ஒன்றே அழியாதது.