தினம் தினம் கொண்டாடலாமே.. அம்மா எனும் மந்திரத்தை!
அம்மா.. இந்த மூன்றெழுத்து மந்திரம் செய்யாத மாஜிக் இல்லை.. உலகின் ஒவ்வொரு துளியும் தாய்மையிலிருந்து உதித்ததுதான்.. தாய்மை இல்லையேல் இந்த பூமியில் ஒரு புல் பூண்டு கிடையாது. அப்படிப்பட்ட அன்னையரை போற்றிப் புகழ ஒரு தினம்.. அதுதான் அன்னையர் தினம்.
தாய்மை என்பது ஒரு வரம். நூறு எலும்புகள் உடைந்தால் எவ்வளவு வலி இருக்குமோ அப்படி இருக்கும் பிரசவ வலி. ஆனால் அதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாது தன் குழந்தையின் வருகைக்காக காத்திருக்கிறது தாயுள்ளம். கண்களில் தூசி விழுந்தாலும் நமக்காக கவலைப்படுவது தாயுள்ளம் தான். உலகமே உன்னை ஒதுக்கி வைத்தாலும் உங்கள் தாய் மட்டும் என்றுமே உங்களை ஒதுக்கி வைப்பதில்லை.

எத்தனைப் பெரிய தவறு செய்தாலும் நம்மை கடைசிவரை அரவணைப்பது தாய் மட்டுமே. தோல்வியால் துவண்டு போகும் போதெல்லாம் உனனால் முடியும் என்ற உத்வேகத்தைை ஏற்படுத்துபவள் தாய். தான் உண்ணாவிட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் பிள்ளைகளின் பசியைப் போக்கி அவர்களின் சந்தோசத்தில் மகிழ்பவள் தாய். இறைவனின் மறுஉருவமாகக் காட்சி தருபவள் தாய்.
தன் உதிரத்தைப் பாலாக தன் குழந்தைக்குக் கொடுத்து தன் உயிர் நீங்கும் வரை பிள்ளைகளுக்காகவே வாழ்பவள் தாய். மகன் அல்லது மகள் தவறே செய்து இருப்பினும் அவர்கள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று நம் நலனில் அக்கறை காட்டுபவள் தாய். எத்தனையோ போராட்டங்களுக்கிடையே நம்மை வளர்த்து ஆளாக்குகிறாள் தாய். தினமும் முடிந்தால் குறைந்தது அரை மணிநேரமாவது உங்கள் தாயுடன் பேசுங்கள். அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது பணமோ பொருளோ கிடையாது ஆறுதலாக அன்பான வார்த்தைகள் மட்டுமே.
நேற்ரு உலக அன்னையர் தினம். அனைத்து தாயுள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த அன்னையர் தினம் வாழ்த்துக்கள். இந்த தினத்தில் மட்டுமல்ல தினம் தினம் கொண்டாடுங்கள் உங்கள் அன்னையரை.












Click it and Unblock the Notifications