எதையுமே எதிர்பாராதீர்கள்!
வாழ்க்கையில் எல்லாமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை. எதையுமே எதிர்பாராதீர்கள். வருவதை வருவது போலவே எதிர்கொள்ளுங்கள்.. அவை வசீகரமாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. ஒரே மனப்பான்மையுடன் அவற்றை எதிர்கொண்டு சமாளியுங்கள்.. மனசை அமைதியாக வைத்துக் கொள்ள அதுவே ஒரே வழி.
எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும். மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி வருத்தமாக இருந்தாலும் சரி எதையும் சமமாக எடுத்துக் கொண்டால் எந்த பிரச்சினையும் கிடையாது. இவ்வாறு இருக்கும் மனிதர்கள் மன அழுத்தம் இருக்காது. அவர்கள் எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களைப் போல நீங்களும் இருங்கள்.

இதுவும் கடந்து போகும் என்ற எண்ணம் அனைவருக்கும் வேண்டும். தடைகளைத் தகர்த்தெறிந்து நீங்கள் சாதனை படைக்கும் போது உங்கள் வலிமையை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள். வெற்றி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறில்லை ஆனால் போட்டியில் பங்கேற்கும் போது உங்கள் மொத்த திறமைகளையும் வெளிக்கொணர்ந்து வெற்றி வாகை சூட முயல வேண்டும்.
எதையும் எதிர்பாராமல் நாம் பிறருக்குச் செய்யும் உதவி கூட நம்மை பிற்காலத்தில் ஏதேனும் ஒரு வகையில் காப்பாற்றும். சில விஷயங்கள் நாம் நினைத்த படி நடக்கவில்லை என்றால் தான் நாம் ஏமாற்றம் அடைகிறோம். உங்கள் கடமையைச் சரியாகச் செய்யுங்கள். பலனை எதிர்பாராதீர்கள்.












Click it and Unblock the Notifications