அண்ணாந்து பார்.. காலுக்குக் கீழே எதையும் தேடாதே!
மேலே அண்ணாந்து நட்சத்திரத்தைப் பார்.. உன் காலுக்குக் கீழே எதையும் தேடாதே. நீ பார்ப்பதை உணர கற்றுக் கொள். இந்த உலகம் எப்படி உருவானது என்பதை எண்ணிப் பார்.. நிதர்சனம் புரியும்.. இது ஸ்டீபன் ஹாக்கிங் சொன்ன பொன்மொழி.
நிறையப் பேருக்கு தாங்கள் எப்படி உருவானோம் என்பதே தெரியாமல் வாழ்கிறார்கள். இயற்கையை அழித்து விட்டு நாம் வாழ முடியாது என்பதை அவர்கள் உணர்வதே இல்லை.
விண்ணோடு மேளச்சத்தம் என்ன.. மண்ணோடு சின்ன தூறல் என்ன என்று இயற்கையோடு பின்னிப் பிணைந்த வாழ்க்கை நம்முடையது. காலையில் எழுந்தவுடன் தூய்மையான காற்று முகத்தில் படும்போது ஏற்படும் சுகமே அலாதியானது. அதுவே நம்மை நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்.

சாப்பாடு முக்கியம்
விவசாயத்தின் மீது ஆர்வம் காட்டாமல் இன்று பலர் பெரிய பெரிய தொழிற்சாலைகளிலும் ஐ.டி நிறுவனங்களிலும் வேலை செய்கின்றனர். நம்முடைய வாழ்வில் உணவு பெரும்பங்கு வகிக்கிறது. இந்த கொரோனா காலக்கட்டத்தில் அனைவரும் வாங்குவது விவசாயம் சார்ந்த பொருட்களை தான். அதைத் தாண்டி இப்போது நமக்கு எதுவுமே தேவையில்லை. வயிற்றுக்கு சோறு போதும் என்ற நிலைக்கு வந்து விட்டோம்.

மழையைக் கொண்டாடுங்கள்
இயற்கையின் அழகை நேரம் கிடைக்கும் போது ரசியுங்கள். மழையைக் கொண்டாடுங்கள். இயற்கைக்கு மாறாக நாம் செய்யும் செயல்கள் தான் நாளடைவில் நமக்கு பேரழிவைத் தருகிறது. இன்று மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் சென்னை போன்ற பெருநகரங்களில் காற்று தூய்மையாக உள்ளது. ஏன் சத்தமே இல்லாமல் இந்த பூமிப் பந்தே எத்தனை அழகாக காட்சி தருகிறது பாருங்கள்.

அன்றே சொன்னார்கள்
நம் முன்னோர்கள் அன்றே சொன்னார்கள். வீட்டிற்கு ஒரு பசுவும் முருங்கை மற்றும் வாழை மரம் இருந்தால் போதும் என்று. இயற்கையோடு இணைந்து வாழுங்கள். வீட்டில் மரம் வளருங்கள். தூய்மையான காற்றை சுவாசிக்கும் போது மனம் மகிழ்ச்சி அடையும். அது மட்டுமல்லாமல் நமது சுற்றுச்சூழலும் புத்துணர்ச்சியோடு திகழும்.. அதனால் ஏற்படும் பலன்களை இப்போது கண் கூடாகவே பார்க்கிறோம்.

வளங்களைக் காப்போம்
வானத்திலுள்ள மேகங்களின் அழகை ரசியுங்கள். இயற்கை இல்லையேல் நாமும் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.இயற்கை வளங்களை இனியாவது பாதுகாப்போம். முடிந்தால் உங்கள் பிள்ளைகளுக்கு விவசாயம் கற்றுக் கொடுங்கள். அவர்களுக்கு சிறுவயதிலேயே இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் அதன் அழகை ரசிக்கவும் கற்றுக்கொடுங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications