ஒவ்வொரு நாளும் வெற்றி அல்ல.. நல்லதை எடுத்துக்கங்க!
ஒவ்வொரு நாளும் வெற்றிகரமானதாக இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமானதாக இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.. ஆனால் கடந்து சென்ற நாட்களில் நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு வரும் நாட்களை வசந்தமாக்குங்கள்.
எல்லா நாட்களும் வெற்றிநாளாக வேண்டும் என்று நாம் நினைப்பதில் தவறில்லை. ஆனால் ஒருவேளை அது அவ்வாறு இல்லாவிட்டால் மகிழ்ச்சியான நாட்களை எண்ணி நம்மை நாமே திடப்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு நாளையும் சிறப்பானதாக்க நம்முடைய முயற்சி அவசியம்.

தோற்ற நாட்களை எண்ணி வருந்தாமல் வெற்றி பெற்ற மகிழ்ச்சியான தருணங்களை நினைத்து என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு போராட வேண்டும். தோற்றப் போன நாட்களை எண்ணி நேரத்தை விரயம் செய்யாமல் அதை எப்படி வெற்றியாக மாற்ற முடியும் என்று சிந்தியுங்கள். தவறுகளைத் திருத்திக் கொண்டு வெற்றியை நோக்கிச் செல்லுங்கள்.
இரவு தூங்குவதற்கு முன் இறைவனிடம் இந்த நாள் எனக்கு இனிதே நிறைவுற்றது எதிர்வரும் நாளும் எனக்குச் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று வேண்டுங்கள். மனதின் எண்ணங்களுக்கு என்றுமே சக்தி அதிகம். மறுநாள் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை வரிசைப்படுத்துங்கள். அதை எவ்வாறு திறம்பட முடிப்பது என்று திட்டமிடுங்கள்.
காலையில் எழுந்தவுடன் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள். வேலைகளை விரைவாக முடித்து வெற்றிக் காண்பீர்கள். நிச்சயம் அந்த நாள் வெற்றிநாளாக இருக்கும். வெற்றியும் தோல்வியும் உங்கள் கையில் தான் உள்ளது. திட்டமிட்டுத் திறம்பட உங்கள் வேலையைச் செய்தால் வெற்றி நிச்சயம்.
எல்லா நாளும் மகிழ்ச்சிப் பொங்க வேண்டுமெனில் அயராத முயற்சியும் திட்டமிடலும் முயற்சியும் தேவை. வெற்றி வேண்டுமா போட்டுப் பாருங்க எதிர்நீச்சல். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. தோல்விகளைத் தூக்கிப் போடுங்கள். வெற்றி நாளை நினைத்து வீறுநடை போடுங்கள். நீங்கள் நினைத்தால் எல்லா நாளும் இனிய நாளே
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications