மனசு சரி இல்லையா...?!
மனசு சரியில்லை.. இது பெரும்பாலும் பலரும் அடிக்கடி சொல்லும் வார்த்தை.. உண்மையில், நாம மனசை சரியாக வைத்துக் கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். நாம் மனசை சரியாக வைத்திருந்தால் அதுவும் சரியாக இருக்கும்.
மனசை சந்தோசமாகவோ அல்லது சோகமாகவவோ வைத்திருப்பது நம் கையில் தான் உள்ளது. எப்பொழுதும் நம் மனதை நாம் நினைத்தால் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். சிலர் எல்லாமிருந்தும் அவரிடம் மகிழ்ச்சி இருக்காது. சிலரிடம் எதுவும் இல்லை என்றாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பர். முதல் வகையைச் சார்ந்தவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள். இத்தகைய மனோபாவம் கொண்டவர்கள் தேவையில்லாமல் சிறு சிறு விஷயங்களுக்குக் கூட கவலைப்படுவர். இதனால் இவர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் மகிழ்ச்சியை அவர்கள் உணர்வதில்லை.

இன்னொரு வகையினர் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. அன்றைய தினத்தை தன் குடும்பத்தோடு இருப்பதை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பர். இந்த மனோபாவம் உடையவர்களிடம் மகிழ்ச்சிக்குப் பஞ்சம் இருக்காது. வாழ்க்கையில் சின்ன சின்ன சந்தோசங்களை அனுபவியுங்கள். மனதில் கவலை இருந்தால் இறை வழிபாடு செய்யுங்கள் அல்லது உங்கள் வீட்டுக் குழந்தைகளுடன் பத்து நிமிடமாவது விளையாடுங்கள். பிறகு பாருங்கள். கவலை இருந்த இடமே தெரியாது. இன்று பலர் எதிர்காலத்தை எண்ணி நிகழ்காலத்தின் சின்ன சின்ன சந்தோசங்களை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.
எத்தனை துன்பங்கள் வந்தாலும் இதுவும் கடந்து போகும் என்று நினைக்க வேண்டும் அது போல உங்கள் வாழ்வில் ஏற்படும் சின்ன சின்ன வெற்றிகளையும் கொண்டாடுங்கள். மனைவி குழந்தைகள் நண்பர்கள் அவர்களுடைய வெற்றிகளையும் கொண்டாடுங்கள்.
பிரச்சினை இல்லாத மனிதரே கிடையாது ஆனால் அதையே நினைத்து வருத்தப்பட்டால் நம்மால் நம் வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்ல முடியாது. மனசை சந்தோசமா வச்சுக்கங்க. பிடித்த இசை கேளுங்க. பிடித்த இடங்களுக்குச் செல்லுங்கள்.கிடைத்த ஒரு வாழ்க்கையை அடு்த்தவர் பொறாமைப்படும் அளவிற்கு சூப்பரா அனுபவியுங்கள். சந்தோசம் அது தான் வாழ்க்கையின் ஜீவன். மனசு சரி இல்லையா கலலைகளை மறந்து வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை நினைவில் கொள்ளுங்கள். மனசை மகிழ்ச்சியா வைத்துக் கொள்ளுங்கள் முகத்தில் புன்னகை தவழட்டும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications