திருவாளர்களே, திருமதிகளே, செல்விகளே..இதோ வந்துவிட்டார்.. முதல் திருநங்கை வக்கீல்!
திருநங்கை சத்யஸ்ரீ சர்மிளா வக்கீல் ஆக பதிவு செய்துகொண்டார்.
சென்னை: இந்தியாவின் முதல் திருநங்கை வக்கீல், இன்று தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கு சென்று வக்கீலாக பதிவு செய்து கொண்டார்.
பரமக்குடியை சேர்ந்த திருநங்கை சத்யஸ்ரீ சர்மிளா. அவருக்கு வயது 36. இவர் இந்தியாவின் முதல் திருநங்கை வக்கீல் ஆவார். இவர் சேலத்தில் 2007-ம் ஆண்டே சட்டம் படித்து முடித்துவிட்டார். ஆனாலும், கடந்த 11 ஆண்டாக பார்கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்யாமலே இருந்தார். திருநங்கைகளுக்கு எப்போது ஒரு அங்கீகாரம் கிடைக்கிறதோ அப்போது தான் வக்கீலாக பதிவு செய்வதாக முடிவு செய்திருந்தார்.

அவர் நினைத்ததுபோலவே, கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் திருநங்கைகளின் வாழ்வில் மறுமலர்ச்சி தொடங்கியது. நல்ல மாற்றங்கள் காணப்பட்டன. இதனையடுத்து, இதனால் சத்யஸ்ரீ சர்மிளா இன்று தன்னை தமிழ்நாடு பார்கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்து செய்து கொண்டார். அப்போது நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யஸ்ரீ சர்மிளா, தனது சமூகத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக முழு ஆதரவு தந்து உதவ போவதாக கூறினார். வக்கீலாக வருவதற்கு உதவிய தன்னுடைய அம்மா, திருநங்கை சகோதரிகள் பலருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறிய அவர், தன்னைப்போல் நிறைய திருநங்கைகள் வக்கீலாக வர முயற்சிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இன்று வழக்கறிஞர் தொழிலில் தானும், காவல்துறை ஆய்வாளராக பிரித்திகா யாஷினி என்ற திருநங்கையும் உள்ளதுபோல், அனைத்து துறைகளிலும் திருநங்கைகள் வரவேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் சத்யஸ்ரீ சர்மிளா கூறினார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications