யார் இந்த உலகில் பெரிய பணக்காரர்?
சென்னை: யார் இந்த உலகில் பெரிய பணக்காரர்.. பில் கேட்ஸா.. முகேஷ் அம்பானியா.. கோடிக்கணக்கில் பணம் சேர்த்து வைத்துள்ளவர்கள்தான் பணக்காரர்களா.. நிச்சயம் கிடையாது.
இப்படி ஒரு அருமையான டாப்பிக்கில் ஒரு வீடியோவைப் பார்க்க நேர்ந்தது.. அதில் கூறப்பட்ட செய்தியைக் கேட்க கேட்க நமக்குள் சிந்தனைகள் துளிர்த்து எழுந்து நிறைய யோசிக்க வைத்தது.

கட்டுக்கட்டாக பணத்தை சம்பாதிக்கிறோம்.. பணம் சம்பாதிக்க ஓடுகிறோம்.. எதற்காக சம்பாதிக்கிறோம், ஏன் ஓடுகிறோம் என்றே தெரியாமல் பலரும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். எப்போதும் வேலை வேலை பணம் பணம் என்றுதான் மனிதனின் மனம் ஓடுகிறதே தவிர எதற்காக சம்பாதிக்கிறோம் என்று யாருமே யோசிப்பதில்லை.
என்னதான் பணம் சம்பாதித்தாலும் உடலில் நோய் நொடி இல்லாமல், கிடைப்பதை வைத்து சந்தோஷமான வாழ்க்கை வாழ்கிறான் பாருங்க.. அவன்தாங்க உண்மையான கோடீஸ்வரன்.. அவனைப் போல கொடுத்து வைத்தவன் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது. ஒரு மனிதன் உயிர் வாழ அடி்பபடை தேவை நல்ல குடிநீர், தேவைக்கேற்ற சாப்பாடு, இருக்க ஒரு இடம், உடுத்த ஆடை.. இவ்வளவுதானே.. இதைத் தாண்டி வருவது அல்லது எதிர்பார்ப்பது எல்லாமே ஆடம்பரம்தான்.
அப்படிப்பட்ட வாழ்க்கை வாழத் தொடங்கும்போதுதான் நாம் நோய்க்குள் போய் விழுகிறோம்.. நோய் நொடி இல்லாத வாழ்க்கையை வாழப் பழகுவோம்.. இந்த வீடியோவில் அதைத்தான் அழகாக வலியுறுத்தியுள்ளனர். நீங்களும் பாருங்க.












Click it and Unblock the Notifications