வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
லோக்சபா, ராஜ்யசபா மீண்டும் ஒத்திவைப்பு
புதுடெல்லி:
பிகார் ஆளுநிர் குறித்து எதிர்க்கட்சிகள் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்ததால், பாராளுமன்றம் கூடிய சில நமிடங்களிலேயே ராஜ்ய சபா, லோக்சபா இரண்டும் ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபா திங்கள்கிழமை வரையிலும், லோக்சபா பிற்பகல் 2 மணிவரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை ராஜ்யசபா தொடங்கிய சில நமிடங்களில் ராஷ்ட்ய ஜனதா தளத்தைச் சேர்ந்த நிரேஷ் யாதவ் மற்றும் சரோஜ் ஆகியோர் நதீஷ்குமாரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அதற்கு பா.ஜ.க. தரப்பில் ஆட்சேபம் தெவிக்கப்பட்டது. இரு தரப்பினரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ராஜ்யசபா போர்க்களம் போல் காட்சியளித்தது.
பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு சிலர் கோனர். அவர்களை அமைதியாக அமருமாரு அவைத் தலைவர் கேட்டுக் கொண்டும் பலனில்லை. இதையடுத்து ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் திங்கள்கிழமை காலை 11 மணிக்குப் ராஜ்யசபா கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கூடிய லோக்சபாவிலும் இதே பிரச்சினை எழுப்பப்பட்டது. சபாநிாயகர் கூறிய பதிலில் திருப்தியடையாத எதிர்க்கட்சிகள் சபை நிடுவே வந்து கோஷம் எழுப்பினர். காங்கிரஸ் எம்.பி. கமல்நிாத், ராஷ்டிய ஜனதா தள எம்.பி. பிரசாத் சிங் ஆகியோர் பிகார் பிரச்சினை குறித்து பத்திக்கைகளில் வந்த செய்திகளைக் காட்டி பிரச்சினையை மீண்டும் மீண்டும் கிளப்பினர். அவர்கள் போட்ட கூச்சலால் பாராளுமன்றமே அதிர்ந்தது.
சபாநிாயகர் பாலயோகி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவர்கள் இருவரும் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். பொறுமையிழந்த பாலயோகி லோக்சபாவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.
கடந்த 15 நிாட்களாக பாராளுமன்றம் நிடக்கவில்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications