வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஏப்ரலில் ரஜினிகாந்த் வெளிநாடு செல்கிறார்
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த், அடுத்த மாதம் தனது மனைவி, குழந்தைகளுடன் 45 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் செய்கிறார்.
சென்னையில் இத்தகவலை செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.
ரஜினிகாந்துக்கு அண்மையில் பத்மபூஷன் விருது கிடைத்தது. இதற்கான விருதை அவர் டெல்லி சென்று பெற்றுக் கொள்கிறார். பின்னர் ஏப்ரல் மாதம் வெளிநாட்டிற்குத் தன் குடும்பத்துடன் செல்கிறார்.
ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து அவர் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.
தனது நெருங்கிய நண்பரும், தெலுங்கு நடிகருமான மோகன் பாபுவுக்கு தெலுங்கில் கதை ஒன்று எழுதியுள்ளார். அந்தப்படத்தில் மோகன்பாபு கதாநாயகனாக நடிப்பார்.
ரஜினி காந்த், வெளிநாடு சென்று திரும்பியவுடன் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் டைரக்டர் ஷங்கர் அல்லது கே.எஸ்.ரவிக்குமார் ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications