வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
இலங்கை சிறையில் இறந்த தமிழக மீனவர் உடல் திருச்சி வந்தது
திருச்சி:
இலங்கை சிறையில் மாரடைப்பால் இறந்த தமிழக மீனவர் வெள்ளைச்சாமி ராஜா (38) உடல் விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்டது.
தூத்துக்குடி அருகேயுள்ள கோவில்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி ராஜா, சில நாட்களுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்கச் சென்றார். அப்போது அவரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு வெள்ளைச்சாமி ராஜா இறந்தார்.
கொழும்புவிலிருந்து ஏர்லங்கா விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்ட மீனவரின் உடலை தமிழக அரசு அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். பிறகு அவரது சடலத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு மீனவரின் சடலம் எடுத்துச் செல்லப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications