வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஜப்பானில் எரிமலை வெடிப்பு
டோக்கியோ:
ஜப்பானின் வடக்குப் பகுதியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்டது.
ஹூக்காடியோ என்ற அந்தப் பகுதியில் உள்ள எரிமலையில் இதுவரை சுமார் ஆயிரம் முறைக்கும் மேல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால் அங்கு வாழும் 10, 000 த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு விடுத்த எச்சரிக்கையை அடுத்து அங்கிருந்து வெளியேறி விட்டனர்.
இந்த எரிமலை வெடிப்பினால் நிலத்தில் சுமார் 100 அடி ஆழம் வரை பாறைகள் மற்றும் நிலப்பகுதிகள் தகர்ந்தன.
திடீரென்று ஏற்பட்ட எரிமலை வெடிப்பு எந்த வித சத்தமும் இன்றி வெடித்தது. மிக மிக மெல்லிய சத்தம் மட்டுமே கேட்டது. இதை உணர்ந்து கொண்ட பக்கத்திலிருந்த மக்கள் உடனடியாகப் போலீஸ் கன்ட்ரோல் அறைக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போது அப்பகுதி முழுவதும் தரைமட்டமாகக் காட்சியளித்தது. அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அரசு எச்சரித்துள்ளது.
இது குறித்துப் போலீசார் கூறுகையில், ஜப்பானில் 1978 ம் ஆண்டிற்குப்பின் தற்போதுதான் இதே போன்ற எரிமலைவெடிப்புச் சம்பவம் ஏற்படுகின்றது.
அப்பகுதியை அடுத்து வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மேலும் அப்பகுதி முழுவதும் எரிமலை வெடிப்பினால் தரைமட்டமாகி விட்டதால் சேத மதிப்பு எவ்வளவு என்பதைக் கணக்கிடமுடியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.