வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
போயஸ் தோட்டத்துக்குப் போன அரசு வருவாய் - திமுக
சென்னை:
அ.தி.மு.க. ஆட்சியில் அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் போயஸ் தோட்டத்துக்குத்தான் (ஜெயலலிதா வீடு) போனது என்று தி.மு.க. உறுப்பினர் பேசியதை அடுத்து தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை காரசாரமான விவாதம் எழுந்தது.
தமிழக பட்ஜெட் மீது நடந்த இந்த விவாதம் வருமாறு:
காந்தி (தி.மு.க.): இந்த ஆட்சியில் வரி வருவாய் 18 ஆயிரம் கோடி அ.தி.மு..க. ஆட்சியில் 10 ஆயிரம் கோடிதான் வருவாய் என்று குமாரதாஸ் பேசினார். அ.தி.மு.க. ஆட்சியில் வரிவருவாய் குறைந்ததற்கு காரணம், அந்த பணம் போயஸ் தோட்டத்துக்குப் போய் விட்டதுதான்.
இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் தாமரைக்கனி , சுந்தரம் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு என்ன ஆதாரம்?" என்று கேட்டனர்.
முதல்வர்: பெரிய ஆதாரம் எதுவும் தேவையில்லை. போயஸ் தோட்டம் வீட்டில் ரெய்டு நடத்தியபோது, கைப்பற்றப்பட்ட ஆபரணங்கள், நகைகளே ஆதாரம். அவைகளை லாரிகளில் ஏற்றி பெட்டி பெட்டியாக கோர்ட்டுக்கு எடுத்து வந்ததும் ஆதாரம்.
காந்தி: அ.தி.மு.க. உறுப்பினர் சுந்தரம் பேசும்போது, 2001ல் ஜெயலலிதா நிதி நிலை அறிக்கை வாசிப்பார் என்றார். அவர் இங்கே வாசிக்க மாட்டார், சிறையில் வாசிப்பார்.
சுந்தரம்(அ.தி.மு.க) : யாரு 2001ல் சிறைக்கு போகப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
முன்னதாக ஆயுர்வேத மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவது பற்றி ஏப்ரல் 4ம் தேதி அறிவிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி உறுதி அளித்தார்.
கேள்வி நேரத்தில் த.மா.கா. உறுப்பினர் குமாரதாஸ் பேசுகையில்,""சித்தா, யுனானி முறையில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு வரி விலக்கு அளித்துள்ளீர்கள். அதே போல் ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கும் வரி விலக்கு அளிக்கப்படுமா?"" என்று கேட்டார். அதற்கு பதில்அளித்த முதல்வர்,""இந்த கோரிக்கை பரிசிலீக்கப்படும் வரிவிலக்கு அளிப்பது பற்றி 4ம் தேதி அறிவிக்கப்படும்"" என்றார்.












Click it and Unblock the Notifications