வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

புதிய ரயில்வே சரக்குக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படுகிறது

புது தில்லி:

ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 7 சதவீத சரக்குக் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் ரூ.600 கோடிக்கு கூடுதல் வருவாய் ஈட்டும் பொருட்டு சரக்குக் கட்டணம் 7 சதவீதம் உயர்த்தப்பட்டது.

மோட்டார் கார், சரக்கு, பார்சல், லக்கேஜ் ஆகியவற்றின் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால், செய்தித்தாள்கள், செய்திப் பத்திரிக்கைகள், மருந்துகள் போன்றவற்றின் சரக்குக் கட்டணம் உயர்த்தப்பட்டவில்லை. இவை தவிர உணவு தானியங்கள், சர்க்கரை, சமையல் எண்ணெய், சமையல் உப்பு, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, காய்கறி ஆகியவற்றின் கட்டணமும் உயர்த்தப்படவில்லை.

ரயில்வே பட்ஜெட்டில் சரக்குக் கட்டணம் உயர்த்தப்பட்டதே தவிர, பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+