வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
18 ஆண்டுகளுக்கு முன் ரஷ்ய ராணுவம் காபூலில் நுழைந்ததையடுத்து அங்கிருந்து வெளியேறி பாகிஸ்தானில் அகதிகளாக தஞ்சம் புகுந்த லட்சக்கணக்கான மக்கள் இப்போது ஆப்கானிஸ்தான் திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் இந்த மக்கள் நாடு திரும்பி வருகின்றனர். சுமார் 30 லட்சம் மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினர். பாகிஸ்தானில் பெஷாவர், பலுசிஸ்தான், பஞ்சாப் மாகாணங்கைள சுற்றி இவர்கள் அகதிகளாக குடியேறினர்.
இவர்கள் சிறிதுசிறிதாக ஆப்கானிஸ்தான் திரும்பி வந்தனர்.
இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் இவர்கள் அதிக எண்ணிக்கையில் நாடு திரும்பி வருகின்றனர். ஆப்கானில் கடும் குளிர்காலம் முடிவடைந்துவிட்ட நிலையில் இவர்கள் ஊர் திரும்புவதற்ான பயண ஏற்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபை கவனித்து வருகிறது. ஒரு குடும்பத்துக்கு 100 டாலர் பணமும் 380 கிலோ கோதுமையும் கூட வழங்கப்படுகிறது.
1999ம் ஆண்டில் சுமார் 92,000 பேர் பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பினர். 77,000 பேர் ஈரானிலிருந்து ஆப்கானிஸ்தான் திரும்பினர், கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 25 லட்சம் அகதிகள் ஆப்கானிஸ்தான் திரும்பி விட்டனர்.
ஆனால், பாகிஸ்தானில் நுழைந்த ஆப்கானியரகள் அகதி முகாம்களில் மட்டும் தங்காமல் வெளியிலும் தங்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தான் மக்களோடு ஒன்றாக கலந்து விட்டனர். பல ஆப்கானியர்கள் வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து, கடைகள், ஹோட்டல்கள் என ஆப்கானியர்களின் கை பாகிஸ்தானில் ஓங்கியே உள்ளது.
பாகிஸாதானின் பெஷாவர் மாகாணத்தில் ஆப்கானியர்களுக்கு தனி பல்கலைக்கழகமே உள்ளது. ஆனால், ஆகதிகளால் தங்களின் சூழலும் அமைதியும் குலைந்துவிட்டதாக பாகிஸ்தானிர்களிடமிருந்து எதிர்ப்பு குரல்கள் ஆரம்பத்திலிருந்தே ஒலித்துக் கொண்டு தான் உள்ளது. தங்களின் வர்த்தகத்தையும் ஆப்கானியர்கள் கைப்பற்றிவிட்டதில் பல பாகிஸ்தானியர்களுக்கும் வருத்தம் உள்ளது.
இதையெல்லாம் மீறி தங்களை நிலைப்படுத்திக் கொண்ட ஆப்கானிஸ்தான் அகதிகள் இப்போது மத அடிப்படைவாதிகளான தலிபான்களின் கையில் ஆட்சி உள்ள நிலையில் அங்கு செல்ல விரும்புவார்களா என்பது சந்தேகமே. ஆனால், அகதிகள் முகாமில் தங்கியிருந்து வாழ்வின் கீழ் மட்டத்துக்கு சென்றுவிட்ட அகதிகள் தலிபான் மிரட்டல்களையும் மீறி நாடு திரும்பி வருகின்றனர்.