வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாகிஸ்தானில் மிக விரைவில் அமெரிக்கர் ஒருவர் கடத்தப்பட உள்ளார் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
கராச்சி அருகே 6 நாட்களில் இந்த கடத்தல் நடக்கும் என ஜோதிடம் சொல்வதைப் போல கூறுகிறது அமெரிக்க உள்துறை. மார்ச் 31ம் தேதி முதல் ஏப்ரல் 6க்குள் இந்த கடத்தல் நடக்கும் என்ற விவரம் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்குக் கிடைத்துள்ளது.
இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை. இருந்தாலும் பாகிஸ்தானில் வசிக்கும் அமெரிக்கர்கள் தங்களின் பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்வது தான் நல்லது என்று அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தவிர தங்களின் பயண நேரத்தை தீடிரென மாற்றிக் கொள்வது, சுற்றுப் புறத்தை நன்றாக தெரிந்து வைத்துக் கொள்வது என கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிக்க டிப்ஸ் கொடுத்துள்ளது அமெரிக்க அரசு.
கடத்தல் முயற்சியில் ஈடுபடப்போவது யார் என்று ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், ஆப்கானிஸ்தானின் ஆதரவு கொண்ட தீவிரவாதக் கும்பல்களில் ஒன்று தான் இந்த செயலில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்திய விமானத்தைக் கடத்திய ஹர்கத்-உல்-முஜாகிதீன் அமைப்புக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
விமானத்தில் கொல்லப்பட்ட ரூபின் கத்யாலின் மனைவியை சமீபத்தில் இந்தியாவில் சந்தித்த அமெரிக்க அதிபர் கிளின்டன் ரூபினின் மரணத்துக்குக் காரணமான தீவிரவாதிகளை பிடிக்க அமெரிக்கா உதவும் என உறுதியளித்ததும் குறிப்பிடத்தக்கது