உபெர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் சீனா-டென்மார்க் இறுதி மோதல்

Subscribe to Oneindia Tamil

நேபாளத்தில் கோழிக்கறி விலை இரு மடங்காக உயர்வு

காத்மாண்டு:

அண்டை நாடான நேபாளத்தில் கோழிக் கறி விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இரு மாதங்களுக்கு முன் கிலோ ரூ.80-ஆக இருந்த கோழிக் கறிவிலை தற்போது ரூ.130-ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலிருந்து கறிக் கோழிகளை இறக்குமதி செய்ய நேபாள நாட்டு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். சமீபத்தில்இந்தியாவிலிருந்து கறிக் கோழிகளை ஏற்றி வந்த லாரிகளையும் அவர்கள் வழிமறித்துத் தாக்கினர்.

கோழிப் பண்ணை உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்தியாவிலிருந்து கறிக் கோழிகளை இறக்குமதி செய்ய நேபாள அரசு தடை விதித்துவிட்டது.இத் தடைக்குப் பிறகு, நேபாள நாட்டில் கோழிக் கறி விலை அதிகரித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்குத் தற்போது கோழிக் கறி விலை மிகவும் அதிகரித்துவிட்டதாக அந் நாட்டு மக்கள்தெரிவித்தனர்.

நேபாள நாட்டு உணவில் கோழிக் கறி மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அன்றாட உணவில் கோழிக் கறி நிச்சயம் இடம் பெறும். காத்மாண்டுபள்ளத்தாக்கில் மட்டும் நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் கோழிகள் தேவைப்படுகின்றன. இந் நிலையில், உள் நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குஅங்கு கோழிகள் உற்பத்தியாவதில்லை. இதனால், அண்டை நாடான இந்தியாவிலிருந்து கோழிகளை நேபாளஅரசு இறக்குமதி செய்து வந்தது.

இந்தியாவிலிருந்து மிகவும் தரம் குறைந்த கோழிகள் இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறி கோழி இறக்குமதிக்கு நேபாள நாட்டு கோழிப் பண்ணைஉரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்தியாவிலிருந்து கோழி இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், உள் நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய முறையில் அதிக அளவில்கறிக் கோழிகளை உற்பத்தி செய்யும் முயற்சியில் அந் நாட்டு கோழிப் பண்ணை உரிமையாளர்கள ஈடுபட்டுள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+