கீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம்
நியூயார்க்:ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் மீண்டும் போரில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக வந்துள்ள செய்திகளுக்கு ஐக்கிய நாடுகளின்பாதுகாப்பு சபையில் கவலை தெரிவிக்கப்பட்டது.
தலிபான் மற்றும் பிற தீவிரவாதக் குழுக்கள் மீண்டும் போரில் ஈடுபட்டால், அது யாருக்கும் வெற்றியாக அமையாது. இதனால்பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே என்றும் பாதுகாப்புக் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் வாங் யிங்பான் கூறுகையில், தெற்கு ஆப்கானிஸ்தானில் கடும் வறட்சி நிலவுகிறது. இன்த நிலையில் நாடு முழுவதிலும்லட்சக்கணக்கான கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தீவிரவாத அமைப்புகள் மக்கள் நலனைப் புறக்கணித்து வருகின்றன. இந்த நிலையில்மறுபடியும் போரில் ஈடுபட்டால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஐக்கிய நாடுகளின் மத்தியஸ்தத்துடனான அமைதிப் பேச்சவார்த்தைக்கு தலிபான் அமைப்பு ஒத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.