முகத்தில் தெளித்த சாரல்...
"சங்கு துவாரத்திற்குள்
உள்ள தண்ணீரில்
முழுவானமும் தெரிந்தது"
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் பிரபஞ்சத்தை உள்ளடக்கியது தான்.
ஒரு புல்லின் நுனியிலும்,
பூவின் இதழிலும்,
பறவையின் சிறகிலும்
பிரபஞ்சம் முழுமையாகப் பிரதிபலிக்கிறது.
இவை அனைத்தையும் அடக்கியதை பிரபஞ்சம் என்றால்
பிரபஞ்சமும் இவை அனைத்திலும் அடங்கியிருக்க வேண்டும்.
ஒரு புல்லின் நுனி கிள்ளப்படும்போது பிரபஞ்சத்தின் ஒரு பகுதியும் காயப்படுகிறது.
ஒரு பறவையின் சிறகு சேதப்படும்போது பிரபஞ்சத்தின்
காதுகளில் சீழ் வடியும்.
மலையாளத்தில் ஒரு கவிதையுண்டு
""இந்தப் பிரபஞ்சம்
சிலந்தி வலையைப் போல் பின்னப்பட்டிருக்கிறது.
எங்கே அறுந்தாலும்
மொத்த வலையுமே சிதைந்துவிடும்.
எந்த மலரைப் பறித்தாலும்
தூரத்து நட்சத்திரம் கூட கண்ணவிழ்ந்து போகலாம்.""
மலருக்கும் நட்சத்திரத்திற்கும் கூட கண்ணுக்குத் தெரியாத
சிலந்தி வலைகள் பின்னப்பட்டிருக்கின்றன.
பிரபஞ்சமே மெல்லிய இழைகளால் ஆன "இணையம் தான்
அது பரிமாற அழகிய தகவல்கள் மனிதனின்
புரிந்து கொள்ளுதலுக்கும் அப்பாற்பட்டவை.
குழந்தை மனிதனின் தந்தை
என்பது குழந்தையும் தந்தையும் முன்பிருந்ததைக்
குறிப்பது.
பிரபஞ்சம் சற்று முன்னர் இருந்து தந்தை வடிவமெனின்
வளர்ச்சியே குழந்தையாய் நீடித்திருப்பதன் அடையாளம்.
பனித்துளியும் நீர்தான்-
கடல் முத்தும் நீர்தான்-
இரண்டுக்குமான வேறுபாடு அளவில் தான்-
இன்னும் சற்று கூர்ந்து பார்த்தால்
பனித்துளிகள் அனைத்தும் கடலில் இருந்து வந்தவையே-
அவை சென்று சேர்வதும் கடலில் தான்.
சங்கு துவாரத்திற்குள் இருக்கும் தண்ணீர் -
வானத்தை பிரதிபலிக்கலாம்-
ஏன் பனித்துளியில் கூட வானம் முகம் பார்க்கலாம்-
வானத்தின் அளவில் வேறுபாடு ஏதுமில்லை.
கடலில் தெரிகிற வானம்
பனித்துளியில் தெரிகிற வானத்தைக் காட்டிலும்
பெரியது என்று ஒப்பிட எந்த முகாந்தரமும் இல்லை.
சங்கும் கடலிலிருந்து தான் வருகிறது
ஒவ்வொரு புல்லுக்குள்ளும் ஒரு வனம் இருப்பது போல்,
ஒவ்வொரு மரத்திற்குள்ளும் ஒரு காடு இருப்பது போல்,
ஒவ்வொரு சங்குக்குள்ளும் ஒரு கடல் இருக்கிறது.
வானம் என்பது என்ன?
கடல் ஏன் நீல நிறமாயிருக்கிறது?
வானத்தைப் பிரதிபலிப்பதால்-
வானம்எங்கே முடிகிறது?
அதன் நிறம் என்ன?
சூரியன் தான் வானத்தின் நிறத்தை முடிவு செய்கிறானா?
முடிவில்லாத அண்டப் பெருவெளிதான் வானமெனின்
அதை எப்படி நீர் பிரதிபலிக்க முடியும்.
வானம் என்பது இருப்பது அல்ல
இல்லாதவற்றாலானது.
வானத்திற்கு வடிவம்
மேகங்களால்,
நிலவால்
உச்சிக்குப் பறக்கும் பறவைகளால்
சூரியனால்
நட்சத்திரங்களால்
உயரமாகச்செல்லும் ஆகாயவிமானங்ளால் தரப்படுகிறது.
இருக்கிறவை சேர்ந்து இல்லாததற்கு,
முடிவு இல்லாத ஒன்றுக்கு வடிவம் தருகிறது.
சங்குகள் இருக்கும் நீரூக்குள்-
தெரிவது வானமல்ல-
மேகங்களும், விண்மீன்களும், நிலவும், அவை
உமிழும் ஒளியும் தான் தெரிகின்றன வானமாய்.ஆகாயமாய்,
அண்டப்பெருவெளியாய்
சங்குக்குள் காது வைத்துக் கேட்டால்
பேரிரைச்சைல் கேட்கும்-
சின்ன சங்குக்குள் அந்த பேரிரைச்சல் எப்படி நுழைந்தது.
பிரபஞ்சம் புரியாத புதிர.
அதைப் புதிர் என்று வேண்டுமானால் புரிந்து கொள்ளலாம்.
சங்குகள் மட்டுமல்ல
கடலில் கூட தெரிவது வானமல்ல
வானத்தின் பிரதிபலிப்பு தான்-
வானமென்பதே எண்ணத்தின் நீட்சிதான் என்றால்
பிரதிபலிப்பு எதில் சேர்த்தி
நமக்குள்ளும் இறைமை பிரதிபலிக்கலாம்-
நாம் சின்ன சங்குதான் என்பதை உணர்ந்தால்
இறைமை வானமாய்ப் பிரதிபலிக்க சம்மதிக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications