தமிழகத்தில் இன்று
(நமது நிருபர்)
சென்னை:
அதிமுகவில் ஜெயலலிதா மேற்கொண்ட "களையெடுப்பு நடவடிக்கைகளுக்கு கட்சி செயற்குழு முழு ஒப்புதல் அளித்தது.
கட்சியை தூய்மைப்படுத்த ஜெயலலிதா மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் அங்கீகரித்து சென்னையில் சனிக்கிழமை கூடிய அதிமுகசெயற்குழுவில் தீர்மானம் நறைவேற்றப்பட்டது.
பெருந்தலைகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு, புதியவர்களை பொறுப்புகளில் அமர்த்தியுள்ள நிலையில் அதிமுகவின் செயற்குழு சென்னையில் சனிக்கிழமைகாலை அக்கட்சி அலுவலகத்தில் கூடியது.
புதுமுகங்கள் நிறைந்த இச்செயற்குழுவில் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முழு அதிகாரம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டது. மேலும் கட்சியின்பொதுச்செயலாளரான ஜெயலலிதாவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்தங்களும் செய்யப்பட்டன.
கட்சிக்காக வாங்கப்பட்ட "சபையர் தியேட்டர் உள்ளிட்ட பல அசையா சொத்துக்கள் முடங்கி கிடக்கின்றன. அவற்றை விற்பதற்கும் ஜெயலலிதாவுக்குஅதிகாரம் வழங்கப்பட்டது.
இலங்கை இனப் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டத் தவறியதற்காகவும், அத்தியாவசியப் பொருட்களின்விலையை உயர்த்தியதற்காகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து 10ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன சைக்கிள் பேரணி நடத்தப்படவும்தீர்மானிக்கப்பட்டது. அதிமுகவில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை இந்திய வரலாற்றில் முதன் முறையாக அமல்படுத்தி, கட்சியின் தலைமைச்செயற்குழுவில் 50 பெண்களை நியமித்த ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதோடு, நாடாளுமன்றத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவைஉடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications