தமிழகத்தில் இன்று
ஹஜிபூர்(பிகார்):
ரகோபூர் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் பிகார் முதல்-மந்திர ராப்ரி தேவி போட்டியிடுகிறார். பிகார் முதல்-மந்திரியாக இருக்கும்ராப்ரிதேவி, தற்போது எம்.எல்.ஏ. வாக இல்லை.
அவர் பதவி ஏற்ற 6 மாதங்களுக்கு உள்ளாக எம்.எல்.ஏ.ஆகவோ அல்லது எம.எல்.சி.,ஆகவோ தேர்ந்து எடுக்கப்பட்டால்தான் பதவியில்நீடிக்க முடியும்.எனவே ராப்ரிதேவி பிகார் மாநிலம் ராகோபூர் சட்டசபை தொகுதியில் இருந்து போட்டியிட முடிவு செய்து இருக்கிறார்.
ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், ராப்ரிதேவியின் கணவருமான லல்லு பிரசாத் யாதவ் கடந்த சட்டசபை தேர்தலின் போது ரகோபூர், தானேபூர் ஆகியஇரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில் ரகோபூர் தொகுதியை அவர் ராஜினாமா செய்து விட்டதால் அது காலியாக இருக்கிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
ரகோபூர் தொகுதிக்கு வருகிற 26-ம்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. எனவே முதல்-மந்திரி ராப்ரிதேவி அங்கு போட்டியிடுவதற்காக 8-ந் தேதிமனு தாக்கல் செய்கிறார்.
அதன்பிறகு நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசுகிறார். மேற்கண்ட தகவலை பீகார் ராஷ்டிரிய ஜனதாதள நிர்வாரகக்குழு உறுப்பினர்பினோத் குமார் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.