For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
காஷ்மீரில் 1 ராணுவ வீரர், 9 தீவிரவாதிகள் உள்பட 11 பேர் பலி

ஜம்மு:

காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 1 ராணுவ வீரர் 9 தீவிரவாதிகள் உள்பட 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உதம்பூர் மாவட்டம்ராஜோரி மற்றும் பகோரி மற்றும் பாரமுல்லா பகுதிகளில் இச்சம்பவம் நடந்தது.

காஷ்மீரில் கடந்த 48 மணிநேரமாக போலீசாருக்கும், ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

தீவிரவாதிகளைக் கையும் களவுமாய்ப் பிடித்து விட வேண்டும் என்று ராணுவத்தினர் ஆங்காங்கே தீவிரரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜோரி மற்றும் பகோரி பகுதியில் பதுங்கி குழிகளில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளைக் கண்டுபிடித்துத் தீர வேண்டும் என்ற எண்ணத்தில்போலீசார் அப்பகுதியில் துப்பாக்கியால் சுட்டனர். தீவிரவாதிகளும் எதிர்த்தாக்குதல் நடத்தினார்கள்.

இந்தத் துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ வீரர், 9 தீவிரவாதிகள் உள்பட 11 பேர் இறந்தனர். இறந்தவர்களில் ஒருவர் குறித்த அடையாளம் இன்னும்கண்டுபிடிக்கப்படவில்லை.

மேலும் தீவிரவாதிகள் போலீஸ் கன்ட்ரோல் அறையைக் குண்டுவைத்து தகர்க்க முயன்றதாகவும் ராணுவ வீரர்கள் தெரிவித்தனர். அவர்கள்விட்டுச்சென்ற பத்திரிக்கைகள், கார், ஏ.கே.- 47 ரக துப்பாக்கிகள், மற்றும் ஆர்.டி.எக்ஸ்.வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் வார்ப்போரா பகுதியில் தீவிரவாதிகள் குலாம் நபி மிர் என்ற ராணுவவீரரை கடத்திச் சென்று சுட்டுக்கொன்றனர்.

தொடர்ந்து பாரமுல்லா, உதம்பூர் மாவட்டங்களில் பதட்டம் நடந்து வருகிறது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X