தமிழகத்தில் இன்று
கொழும்பு:
இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையினராக வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.தமிழர் பாதுகாப்புக்கு என சிறப்பு கண்காணிப்பு கமிட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் ஏந்திய ராணுவ வீரர்கள் இந்த பகுதிகளை கண்காணித்து வருகின்றனர். தமிழர்கள் மீது எந்தவிதமானதாக்குதலும் நடந்துவிடாமல் அரது பாதுகாக்கும் என செய்தித்துறை அமைச்சர் மங்கள சமரவீரா கூறினார்.
எங்கெல்லாம் வன்முறை நடக்கும் எனக் கருதப்படுகிறதோ அந்தப் பகுதிகளில் எல்லாம் வீரர்களை காவலை பலப்படுத்துமாறுபோலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. சந்தேகத்துக்குரிய வகையில் யார் தென்பட்டாலும் போலீசார் அவர்களை கைது செய்வர்என்றார்.
1983ம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தான் அங்கு தமிழ் போராளிக் குழுக்கள் உருவாகக் காரணமாக இருந்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது. வட இலங்கையில் 13 சிங்கள வீரர்கள் உயிரிழந்தையடுத்து கொழும்புவிலும் பிற இடங்களிலும்தமிழர்களின் வீடுகள் மீது சிங்கள தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 2,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே இலங்கை நாடாளுமன்றத்தில் யாழ்பாண சிக்கல் குறித்து காராசாரமான விவாதம் நடந்தது. இதில் பேசியபாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ஜெனரல் அனிருத்த ரத்வதே, யாழ்பாணத்தை விடுதலைப் புலிகளுக்கு விட்டுத் தரமாட்டோம். அங்கு கடைசி வீரர் இருக்கும் வரை போர் தொடரும். யாழ்ாணத்தை காப்போம் என்றார்.
அதிபர் சந்திரிகா தொலைக் காட்சியில் பேசுகையில், வன்னி, யானை இறவு பகுதிகளில் நமக்கு தற்காலிக தோல்விஏற்பட்டுள்ளது. இது மிகப் பெரிய தோல்வியாகும் என்றார்.












Click it and Unblock the Notifications