தமிழகத்தில் இன்று
கொழும்பு:
இலங்கை அரசு பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்துவதற்குக் தடை விதித்துள்ளது. இந்தத் தடை வரும் மே 22ம் தேதி வரை அமுலில் இருக்கும்.
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா இந்த உத்தரவைத் திங்கள்கிழமை இரவு பிறப்பித்தார்.
இலங்கையில் யாழ்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் நடந்த போரில் விடுதலைப்புலிகள் 40ஆயிரம் ராணுவ வீரர்களைச் சுற்றி வளைத்துள்ளனர்.
இந்நிலையில் போர் நடக்கும் பகுதியைச் சுற்றி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில்பத்திரிக்கையாளர்களோ, புகைப்படக்காரர்களோ செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அங்கே பொதுமக்கள் கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ, ஊர்வலங்களோ நடத்தக் கூடாதுஎன்று இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்குப் பல அரசியல் கட்சிகள், மற்றும் அரசியல் அமைப்புகள் கண்டனக் குரல் கொடுத்துள்ளன. அவர்கள்இதனை எதிர்த்துப் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.