தமிழகத்தில் இன்று
ஜோத்பூர்:
ராஜஸ்தானில் ஜோத்பூர் அருகே பழங்கால முறைப்படி பால்யத் திருமணம் நடந்தது. 10 வயது சிறுவனுக்கும், 6 வயது சிறுமிக்கும் பெரியோர்கள் பால்யவிவாகம் நடத்தி வைத்தனர்.
இந்தியாவில் சதி, உடன்கட்டை ஏறுதல், பால்யவிவாகம் போன்றவற்றிற்கு ராஜாராம்மோகன் ராய் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து பால்யவிவாகத்திற்கு இந்திய அரசு தடைவிதித்தது. 18 வயது தாண்டினால் தான் பெண்களுக்குத் திருமணம் நடத்த வேண்டும் என்று சட்டம்பிறப்பித்தது.
இந்த சட்டம் அமுலில் இருந்து வரும் இந்த நேரத்திலும் ராஜஸ்தானில் உள்ள சில இந்துக் குடும்பங்களிலும் இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ராஜஸ்தானில் உள்ள கிராமம் ஒன்றில் 10 வயது சுந்தர் என்ற சிறுவனுக்கும், 6 வயது ராதா என்ற சிறுமிக்கும் பால்ய விவாகம் நடந்தது.
ராஜஸ்தான் தலைப்பாகையுடன் அலங்காரம் செய்யப்பட்டிருந்த சுந்தருக்கும், மணப்பெண்ணிற்குரிய அலங்காரம் செய்யப்பட்டிருந்த ராதாவுக்கும் இந்த பால்யவிவாகம் நடந்தது.
இதற்கு பல்வேறு பொதுச் நலச் சங்கங்கள் கண்டனக்குரல் தெரிவித்துள்ளன. இந்த 21 ம் நூற்றாண்டிலும் நடந்த இந்த பால்ய விவாகம் பலரைஅதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.