தமிழகத்தில் இன்று
வசாய்:
லாரி கால்வாயில் விழுந்ததில் 14 பக்தர்கள் இறந்தார்கள். சுமார் 63 பேர் படுகாயமடைந்த நிலையில்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இந்தக் கோர விபத்து தானே மாவட்டத்தின் அருகே இன்று காலை நடந்தது.
தானே கிராமாந்தரப் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இறந்தவர்களில் பெண்கள், குழந்தைகள் அடங்குவார்கள். மேலும் 90 க்கும் மேற்பட்ட பக்தர்களைஏற்றி வந்த லாரி தானே அருகே இன்று அதிகாலை வரும்போது பக்கத்திலிருந்த கால்வாயில் விழுந்தது. லாரிடிரைவர் பிரேக் பிடிக்க முடியாமல் திணறியதால் லாரி தாறுமாறாய்த் தறிகெட்டு ஓடி அருகிலிருந்த கால்வாயில்விழுந்ததால் இவ்விபத்து நடந்தது.
சம்பவம் கேள்விப்பட்டதும் உயர்போலீஸ் அதிகாரிகள் அங்கு சென்று விபத்து நடந்த இடத்தை நேரில் சென்றுபார்வையிட்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.