தமிழகத்தில் இன்று
டெல்லி:
உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறிமுகப்படுத்தப்பட்ட டாடா இன்டிகா காரை சிறந்த முறையில் வர்த்தகப்படுத்தியதற்காக டாடாநிறுவனத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதுடன் வெள்ளிப் பட்டயமும், ரூ 10 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.
இந்த விருதை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி வெள்ளிக்கிழமை வழங்குவார்.
இந்த விருது இன்டிகா கார் குழுவினருக்கும் வழங்கப்படுகிறது. டாடா நிறுவன சேர்மன் ரத்தன் டாடா இது குறித்துக் கூறுகையில்,
நாங்கள் முதலில் டாடா இன்டிகா கார் தயாரிக்கும் போது முழுக்க முழுக்க இந்தியத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே தயாரிக்க வேண்டும் என்றுதிட்டமிட்டோம். அதே போல் வடிவமைத்தோம். இன்று இந்தியச் சாலைகளில் செல்லும் கார்களில் 55,000 கார்கள் டாடா இன்டிகா கார்கள். இதுஎங்களை மிகவும் பெருமைப்படுத்துகிறது.
தேசிய விருது கிடைத்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆறே மாதத்தில் எங்களுக்குக் இரண்டாவது தேசிய விருது கிடைத்துள்ளது.வாகனங்களுக்கான பாகங்கள் உற்பத்தியிலும், விற்பனையிலும் எங்கள் நிறுவனம் முன்னணியில் உள்ளது.
டாடா நிறுவத்தில் நேரடியாக 4000 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். இந்த விருது எங்கள் முழுக் குழுவினருக்கும் கிடைத்த வெற்றி என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications