For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

மே 11, 2000

கண்ணன்- என் ஆண்டான்
(புன்னாரவராளி -திஸ்ர ஏகதாளம்)

(ரசங்கள்: அத்புதம், கருணை)

தஞ்ச முலகினில் எங்கணு மின்றித்
தவித்துத் தடுமாறி,
பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன்;
பார முனக் காண்டே
ஆண்டே! -பாரமுனக் காண்டே!(1)


துன்பமும் நோயும் மிடிமையுந் தீர்த்துச்
சுகமருளல் வேண்டும்;
அன்புடன் நின் புகழ் பாடிக்குதித்து நின்
ஆணை வழி நடப்பபேன்;
ஆண்டே!-ஆணை வழி நடப்பேன்.(2)


சேரி முழுதும் பறையடித் தேயருட்
சீர்த்திகள் பாடிடுவேன்;
பேரிகை கொட்டித் திசைக ளதிரநின்
பெயர் முழக்கிடுவேன்.
ஆண்டே! பெயர் முழக்கிடுவேன்(3)


பண்ணைப் பறையர்தங் கூட்டத்தி லேயிவன்
பாக்கிய மோங்கி விட்டான்.
கண்ண னடிமை யிவனெனுங் கீர்த்தியின்
காதலுற் றிங்கு வந்தேன்;
ஆண்டே! -காதலுற்றிங்கு வந்தேன்.(4)


காடு கழனிகள் காத்திடுவேன், நின்றன்
காலிகள் மேய்த்திடுவேன்;
பாடுபடச் சொல்லிப் பார்த்ததன் பின்னரென்
பக்குவஞ் சொல்லாண்டே!
ஆண்டே-பக்குவஞ்சொல்லாண்டே!(5)


தோட்டங்கள் கொத்திச் செடிவளர்க்கச் சொல்லிச்
சோதனை போடாண்டே!
காட்டு மழைக்குறி தப்பிச் சொன்னா லெனைக்
கட்டியடி யாண்டே!
ஆண்டே!-கட்டியடி யாண்டே!(6)


பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப்
பிழைத்திட வேண்டுமையே!
அண்டை யயலுக்கென் னாலுப காரங்கள்
ஆகிட வேண்டுமையே!
உபகாரங்கள் -ஆகிட வேண்டுமையே!(7)


மானத்தைக் காக்கவோர் நாலுமுழத் துணி
வாங்கித் தரவேணும்!
தானத்துக்குச் சில வேட்டிகள் வாங்கித்
தரவுங் கடனாண்டே!
சில வேட்டி -தரவுங் கடனாண்டே.(8)


ஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி
யொருசில பேய்கள் வந்தே
துன்பப் படுத்துது, மந்திரஞ் செய்து
தொலைத்திட வேண்டுமையே!
பகையாவுந் -தொலைத்திட வேண்டுமையே!(9)


பேயும் பிசாசுந் திருடரு மென்றான்
பெயரினைக் கேட்டளவில்,
வாயுங் கையுங்கட்டி அஞ்சி நடக்க
வழிசெய்ய வேண்டுமையே!
தொல்லைதீரும் - வழிசெய்ய வேண்டுமையே!

(அடுத்தது கண்ணன் என் ஆண்டான்)

Back To Index

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X